வியாழன், 17 நவம்பர், 2022

குயில் குரல்கற்ற வேனில்

 குயில் குரல்கற்ற  வேனில்

______________________________________________________

சொற்கீரன்


மாமை மணிநிறம் மறப்ப விடாது

இலஞ்சி அடர்நிழல் அருகு சினைஇய‌

பழுப்புத்தீயின் தளிர்மின் கலிப்ப‌

மாவும் நோக்கும் என் பசலை ஆர்த்து.

புன்காற் பாதிரி வரிநிழல் தூஉய்

தும்பி சேர் நெடுவனம் கல்லென எடுக்கும்

புலம்பொலி மறக்கல் நேராது ஈண்டு

என் மொழி அவன்பால் நுணங்கறல் போன்ம் 

நீள்வரி எழுதும் என் கண்ணிணை நோக்கும்.

வேனில் பொறிகிளர் வெங்கான் பறந்தலை

துடிசெய் அம்புள் கருங்குயிலும்

என் புலம்புகொள் பண்ணில் தன்

அலம்பல் தீங்குரல் கற்றிட வருமே.

குயில் குரல்கற்ற  வேனில்  இவண்

மாறுகொள் நோன்றல் எய்தியது என்னே.


_____________________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக