ஞாயிறு, 13 நவம்பர், 2022

அது என்ன?...1


அது என்ன?...1

_____________________________________________

ருத்ரா



 ஓ வென்று

வாய்விட்டு அழலாம் 

என்று தோன்றுகிறதா?


"தனியொருவனுக்கு 

உணவில்லை எனில் 

இந்த ஜெகத்தினை

அழித்திடுவோம்" என

சீறவேண்டும் என்று

தோன்றுகிறதா?


இவை இரண்டு

எதிர்நிலைகள்.

உணர்ச்சிகளையெல்லாம்

கழற்றியெறிந்து விட்டு

அதோ

அந்த அரசமரத்தடியில் 

உட்காருங்கள்.


ஒரு மனிதன்

தன் தலையை தானே

வெட்டிக்கொள்ளவேண்டும்

இல்லையெனில்

அடுத்தவன் 

தலையையாவது 

வெட்டி எறிய வேண்டும் 

என்ற வெறிக்குள்

மூழ்கி விடும் 

அபாயங்கள்

அவன் மனக்கடலின்

ஆழத்துள் கிடக்கின்றன.


இதை 

சமப்படுத்தும்

ஒரு ஆழ்நிலையின்

வெளிப்பாடு தான்

மதங்களும்

அவை காட்டும் கடவுள்களும்.


அந்த கடவுள்களே

வெறி கொண்டு

பலி கேட்பதாக‌

இந்த மனிதன் மீண்டும்

அரிவாள்களை 

தூக்கிக்கொண்டிருப்பதை

பார்க்கும் போது

இந்த மனிதனை

கோபம்,

ஏதோ ஒரு பழிவாங்கும்

வெறி,

இவையெல்லாம் இல்லாத‌

"ரோபோட்டுகளாக"

படைத்தால் என்ன‌

என்று 

அறிவுக்கு தினவு

எடுத்ததின் விளைவு தான்

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

மகிழ்ச்சி தான்

என்று ஆரவாரம் செய்தோம்.

இனி இந்த உலகமே

ஒரு அமைதிப்பூங்கா

என்று மகிழ்ந்திருக்கையில்

இந்த ரோபோட்டுகளின் கைவிரல் நுனி

இருக்கும் இடத்தைப்பார்த்து

நாம் மீண்டும் ஒரு

அழிவுக்கடலுள் விழும் அபாயத்தில்

இருக்கிறோம் 

என்பதே இப்போது 

பேரதிர்ச்சி

பெருங்கவலை.

அது என்ன?


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக