செவ்வாய், 29 நவம்பர், 2022

ஜெகதீஷ்சந்திரபோஸ்

 

ஜெகதீஷ்சந்திரபோஸ்

_________________________________ருத்ரா


செடி கொடி இனங்களுக்கு

தமிழன் "பயிர்" என்று

பெயர் வைத்ததிலேயே

ஒரு அறிவியல் உளது 

என்று காட்டிவிட்டான்.

அச்சம் மடம் நாணம் அப்புறம்

"பயிர்ப்பு"என்று

சொல் வழங்குவதைப் பாருங்கள்.

பயிர்ப்பு எனும் மெல்லிய சிலிர்ப்பு

உணர்ச்சியையே அந்த சொல் சுட்டுகிறது.

"வாடிய பயிரை"கண்ட போதெல்லாம்

நம் வள்ளலார் வந்து விடுகிறார்.

ஜெகதீஷ் சந்திரபோஸ்

"பயிர் என்றால் உயிர்"

என்ற தமிழ் விஞ்ஞானத்தை

நமக்கு புகட்டிவிட்டார்.

போஸின் அறிவியல் ஒரு 

சிந்தனைப்புரட்சியின் வடிவம் தான்.

இயற்கையின் அறிவியல் அவரிடம்

உயிர் மூச்சாய் இழைந்து

இந்த உலகிற்கு ஒரு வெளிச்சம்

தந்திருக்கிறது.

அந்த மேதையின் புகழ் ஓங்குக!


________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக