திங்கள், 17 செப்டம்பர், 2018

ஓவியக்காடுகள்








ஓவியக்காடுகள் 
================
ருத்ரா 

காகிதத்தை எடுத்துவைத்துக்கொண்டு 
என்ன எழுதலாம் 
என்று 
பேனாவை உருட்டிக்கொண்டே இருக்கும்
கவிஞன் 
நுழைந்து கொண்டிருப்பது 
இருட்டே அங்கு மரங்களாய் கிளைகளாய் பூக்களாய் 
இருக்கும் 
ஒரு அடர்ந்த காட்டைத்தான்.
ஆம் 
ஓவியனும் 
அப்படி நுழைவது 
ஒரு தூரிகைக்காட்டைத்தான்.
அது 
பெண்ணின் கண்களின் 
கன அழுத்தம் கொண்ட 
சுநாமித்துடிப்புகளாய் இருக்கலாம்.
அவள் கனவுகளெல்லாம் 
தீப்பற்றி எரியும் 
அக்கினியின் அட்லாண்டிக்கடல் சீற்றங்களாக 
இருக்கலாம்.
நசுங்கிப்போகும் அந்த 
நத்தைக்கூட்டிலா 
நாலாயிரம் பிரளயங்கள் 
கருக்கொண்டிருக்க இயலும்?
சித்தனைகளின் 
"அவலாஞ்சி "
முகடு தட்டி நிற்கின்ற 
அவன் இமயசெறுக்குகளை 
தவிடு போட்டி ஆக்கி விட்டது.
அவன் 
அந்த தூரிகையில் 
மறைந்தே போனான்.
ஓ 
அன்பான பார்வையாளர்களே 
அந்த லகானை 
நீங்களே கைப்பற்றுங்கள்.
அவன் 
முரட்டுக்குதிரையாய் 
திமிறுவான் குதிப்பான் 
அதில் 
சமுதாய ரத்தம் 
வண்ணப்பிழம்புகளாய் 
அங்கே 
அடர்மழைபெய்யலாம்.
ஓவியமும் தலைப்பும் 
உங்கள் 
இதயக்காடுகளில் சிக்கிக்கிடக்கிறது.
அதை 
பூர்த்தி செய்யுங்கள்.
ஆம் 
அதை பூர்த்தி செய்யுங்கள்!

========================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக