திங்கள், 17 செப்டம்பர், 2018

".......அது ராங்கா போகாம இருந்ததில்லே "

".......அது ராங்கா போகாம இருந்ததில்லே "
==================================================ருத்ரா

பிள்ளையார் பிடிக்கப்போய்....
குரங்காய் முடிந்தது
என்பது பழமொழி.
அதற்குள்
வெறும் சாணிப்பிள்ளையார்
பிண்டம்பிடிக்கப்படும் கதை
மட்டும் இல்லை.
சைவம்
வைணவத்துக்கு மாற்றப்படும்
"மத மாற்ற" அரசியலும் உண்டு.
அந்த
"ஷண்மத"ப் பிரிவுகளிடையே
சிரச்சேதங்களும்
கழுவேற்றல்களும்
கல்லில் பூட்டி
கடலில் பாய்ச்சிய கொடூரங்களும்
யானையால்
தலைகள் மிதித்து
நசுக்கப்படுவதுமான‌
கோரதாண்டவங்களுக்கு
பஞ்சமில்லை.
இதன் அடிக்காரணம்
கடவுள் தத்துவம்
அது இது எனும்
எந்த மண்ணாங்கட்டியும் இல்லை.
"அரசாளவேன்டும்" என்ற‌
அந்த ஒரே நாற்காலி வெறி தான்.
இன்று ஒரே தேசம்
என்பவர்களும்
அந்த வெறிக்கு தான்
வெறியோடு பல்லக்கு தூக்குகிறார்கள்.

முருகனும் மாரியம்மனும் தான்
தமிழ் மண்ணுக்குரியவை.
அந்த ராட்சச "விநாயகர்களின் ஊர்வலமும்"
குழப்பம் விளைவிக்கும்
கோஷங்களும்
பழைய ஷண்மத போர்க்கலவரங்களை
புதுப்பிக்கின்றனவோ
என்ற ஐயமே பெரும் அச்சமாக‌
இங்கு கவிகிறது.
அதனுள்
தமிழர்கள் நாத்திகம் பேசுவதை
நசுக்கிவிடவேண்டும் என்று
ஒரு உட்புகைச்சலும் உருவாக்கப்படுகிறது.
அந்த கலகங்களுக்கு
"பிள்ளையார் சுழி" போடும் இடம்
மசூதிகளாக இருப்பது
ஒரு அரசியல் சாணக்கியம் ஆகும்.
ராஜா கைய வச்சா அது
ராங்கா போனதில்லை என்று
யாரோ புளகாங்கிதமாய்
பதிவிட்டிருந்தார்.
அந்த ராஜா போட்ட கூச்சல்
"ராஜா கைய வச்சா அது
ராங்கா போகாம இருந்ததில்லை"
என்று தான் நம்
காதில் விழ வைத்தது.

=========================================================


1 கருத்து:

vimalanperali சொன்னது…

சமூகத்தைப்பாதிக்கும் எதுவுமே ராங்க்தான்,

கருத்துரையிடுக