திங்கள், 3 செப்டம்பர், 2018

"சீதக்காதி"விஜயசேதுபதி.

"சீதக்காதி"விஜயசேதுபதி.
====================================ருத்ரா

வில்லும் அம்புமாய்
விஜய சேதுபதி
ஏதோ அந்தக்காலத்து
மூச்சை இழுத்துப்பாடிய‌
"மேவாத மான்.."பாட்டின்
உயிர்மூச்சை தன் மீது
மேய விட்டுக்கொண்டு
லுக் விடுவது போல்
ஒரு ஆழமான பார்வை
ஆனந்தவிகடன் ஸ்டில்களில்
கண்டேன்.
சுவாமி சங்கரதாஸ் அந்த‌
கதைக்குள் இருப்பாரா என்பதும்
தெரியவில்லை.
ஆனால்
மிக உயரிய கவிதைவரிகளுக்கான‌
விருது தரப்படவேண்டிய‌
ஒரு இயக்குநர் அல்லவா
இங்கே தன் முகவரியை
தந்திறுக்கிறார்.

"நடுவுல கொஞ்சம்
பக்கத்தைக்காணோம்"

என்ற அந்த தலைப்பே
ஆழமான கவிதைகளின்
தொகுப்பு அல்லவா?
சீதக்காதி என்றதுமே
சமாதியிலிருந்தும் கூட‌
அந்த வள்ளலின் மோதிரம் நீட்டிய‌
காட்சிதானே
நம் மனக்கண்ணில் இருக்கும்.
இதில் விஜயசேதுபதியும்
காட்டவிருப்பதும்
"ந‌டிப்பின்"ஒரு விலையுயர்ந்த‌
மோதிரமாக இருக்கலாம் அல்லவா!
நடிப்புக்குள் நடிப்பாக‌
தண்ணீருக்குள்
கண்ணீர் விடும்
துடி துடிக்கும் ஒரு மீனாக‌
அவர் அவதாரம் எடுத்திருக்கலாம்.
ஒரு புகழ் பெற்ற நடிகன்
தன் கடந்த வாழ்வின்
பக்கங்களை திருப்பினாலும்
அதில் "வாழ்க்கையின்" நிழல்
கொஞ்சம் கூட ஒட்டியிருக்காது.
ஏனெனில் அவன் வாழ்க்கை முழுவதும்
அரிதாரங்கள் பூசிய அசைவுளே
வலம் வந்து கொண்டிருக்கும்.
உப்புக்கரித்த
அவன் உண்மைக்கண்ணீரில் கூட‌
கிளிசரினே சுவை கூடியிருக்கலாம்.
அந்த "ஐயா"தன் முத்திரையை
அந்த நரையிலும் திரையிலும்
காட்டியிருப்பதை விடவும்
வாழ்க்கையின் கச்சா ஃபிலிமிம்
ஓவ்வொரு ஃப்ரேமிலும்
நடிப்பின் பெருங்கடல்
தளும்பமுடியாமல் தளும்பும்
காட்சிகளைத்தான் காட்டியிருக்கும்
என நினைக்கிறேன்.
அவர் கையில் இருக்கும்
வில்லும் அம்பும்
சமுதாய வக்கிரங்களை நோக்கியும் கூட‌
படையெடுத்திருக்கலாம்.
படம் வெந்தபின் ..திரைக்கு
வந்த பின் அவர்
புரட்சிகரமான பரிமாணங்கள்
பல திருப்புமுனைகளை
நமக்குக்காட்டலாம்.
அந்த "ஐயா"வுக்கு
ஏற்ற ஒரு "அம்மா"வாக வரும்
கதாநாயகியின் முகரேகைகளில் கூட‌
ஒரு பூகம்பத்தின் முக ரேகைகள்
மெல்லிய மயிற்பீலி வருடல்கள் போல‌
தெரிகின்றன.
பொறுத்துப்பார்க்கலாம்
திரையில் நிகழப்போகும்
ஒரு "பிக் பேங்க்"
எனும் நடிப்பின் "பெருவெடிப்பை!"

============================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக