வெள்ளி, 21 செப்டம்பர், 2018

ஜ்யாமெட்ரி ஆஃப் "கடவுள்"

ஜ்யாமெட்ரி ஆஃப் "கடவுள்"
================================================ருத்ரா

மனிதனுக்கு முன் ஒரு மனிதன் இருந்தான்
இவன்
அவன் பெயரைக் கடவுள் என்றான்
அதற்கு முன்னும் போய் யோசிக்க முடியாதவன்
கடவுளோடு நின்று விட்டான்.
விஞ்ஞானியால் அதற்கு முன்னும் போகமுடியும்.
ஆனால்
எல்லா விஞ்ஞானிகளும் நாத்திகர்கள் இல்லை.
எல்லா நாத்திகர்களும் விஞ்ஞானிகள் இல்லை.
பகுத்து அறியும் அறிவே
அறிவுகளில் சிறந்த அறிவு.
ஆம்
அப்படி பகுத்து அறிந்தால் தான்
கடவுள் தெரியும் என்றார்கள் கடவுள் கருத்தாளர்கள்.
அறியாததை அறிந்ததாக பாவ்லா காட்டுவது
இவர்களுடைய பகுத்தறிவு.
அறியாததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அறிவை வெட்டியெடுப்பதே பகுத்தறிவு.
இது நாத்திகர்களின் பகுத்தறிவு.
அறியாததை பத்திரமாக வைத்திருந்து
அதற்கு குடமுழுக்கு செய்வதே
ஆத்திகர்களின் அன்றாடப்பணி.
ஆனால்
அறியாமையை எல்லாம்
அறிவால் வகுத்து
மிச்சமே வராத ஒரு "கோஷியண்ட்"
ப்ளாங்க்ஸ் கான்ஸ்டாண்டிலிருந்து தொடங்குகிறது.
சாத்தான்களையெல்லாம்
எலிமினேட் செய்யும் கணிதம்
கடவுளுக்கும் தெரியாது.
கடவுள் சாத்தான் இரண்டும்
ஒரு டியுவாலிடி ஜ்யாமெட்ரி.
ஒரு புள்ளியில் இன்ஃபினிடி ஆஃப் லைன்ஸ்.
ஒரு கோட்டில் இன்ஃபினிடி ஆஃப் பாயிண்ட்ஸ்
என்பதுவே டியுவாலிடி ஜ்யாமெட்ரி.
கடவுள் சாத்தான் எனும்
டியுவாலிடி ஜ்யாமெட்ரியில்
இருக்கும் கணிதமே நாத்திகம்.
மனிதனை பிறக்க வைத்து கடவுளை
சிந்திக்க வைப்பதற்கு பதில்
கடவுளே பிறந்து விடலாமே.
பிறப்பு இருந்தால் கடவுளுக்கும்
இறப்பு உண்டு.
இப்படி தர்க்க சாஸ்திரம் எல்லாம்
சொல்கின்ற நாத்திகம் கூட‌
ஒரு சாஸ்திரமே.
விஞ்ஞானமாய் எல்லாம் சிந்திக்க
ஆரம்பித்து விட்டால்
கடவுளே சொல்லுவார்
கடவுளே இல்லை என்று.

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக