ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

குப்பைகளை அகற்று.



குப்பைகளை அகற்று.
=============================================ருத்ரா

குயவன்
சட்டி
இதெல்லாம்
சித்தர்களின்
கடவுள் பற்றிய கற்பனைகளுக்கு
சொல்லப்பட்ட‌உருவகங்கள்.
உருவங்களும் உவமைகளும்
உண்மையின் பொ(ய்)ம்மைகள் தான்.
உண்மைகள் அல்ல.
அவனன்றி
ஓர் அணுவும் அசையாது.
அந்த உள்மனிதன் நீயே தான்.
கணினி யுகம் கண்டுபிடித்த
அந்த "மார்ஃ ப் " கர்ப்பத்தில்
வந்த அந்த "வெர்ச்சுவல் மனிதன்"நீயே.
உன் மூளை
இந்த "பூலியன் அல்ஜீப்ரா"வுக்குள்ளிருந்து
உன்னையே
அந்த வெர்ச்சுவல் மனிதன் ஆக்கியிருக்கிறது.

அணுவும் அதன் உள்ளணுவும்
எப்படி தன்னைச்சுற்றி
மிகவேகமாக ஓடி ஓடி வந்ததில்
இன்னொருமனிதன்
"குவா குவா" என்றது.
அது தான் "குளுவான்"
அளப்பறிய ஆற்றல் உட் துகள்களை
ஒட்டுவித்து  அதை ஒரு புலம்
ஆக்குகிறது.
ஒட்டு எனும் "குளு" தான்
இங்கே குளுவான் ஆகியுள்ளது.
அறிவு செதில்கள்
நம் மூளைக்குள் இருக்கிறது.
இவையே எல்லாவற்றையும்
வெளிப்படுத்துகிறது.
ஆற்றல் துகள் ஆற்றல் உமிழ‌
ஒரு புலம் வேண்டும்.
இந்த ஆற்றல் துகள் பொதுவாய்
"பெர்மியான்" ஆகும்.
இதில் நிறை உள்ளது.
இதன் ஆற்றல் களமான அந்த
புலமே பொதுவாய் "போஸான்" ஆகும்.
இது "நிறை" அற்றது.
அந்த அந்த அணு உட்துகள் உலையில்
திடீரென்று ஒரு
புதிய போஸான்
"நிறைக்கு காரணமான ஒரு நிறையை"
வெளிப்படுத்தியது.
இந்த போஸானை "ஹிக்ஸ்"
என்பவர் கண்டுபிடித்தார்.
இந்த பிரபஞ்சம்
ஆற்றல் (நிறை)
புலம் (ஃபீல்டு)
என்ற இரண்டால் மட்டுமே
மிடையப்பட்டிருக்கிறது
என்பது ஒரு அறிவியல் கணித சமன்பாடு.
இந்த "ஹிக்ஸின் போஸான்"
அந்த சமன்பாட்டை உடைப்பதாக
அல்லவா இருக்கிறது.
விஞ்ஞான உலகம் அரண்டு போனது.
அந்த ஹிக்ஸ் போஸான் இருப்பது
உண்மை என சமீபத்திய ஒரு சோதனையும்
நிரூபித்து விட்டது.
அண்டத்துள் ஒரு எதிர் அண்டமும்
கரு தரித்திருக்கிறது
என்ற இந்த விஞ்ஞானமே
இன்றைய மனித மூளை கண்டுபிடித்த‌
புதிய மைல்கல்.
அணு ஆற்றலை
தன் செல்ல "பொமரேனியன்"ஆக்கி
கையில் பிடித்து
"வாக்" போகும் மனிதன்
இப்படி பிரபஞ்சங்களையும்
தன் "மேஜையின்" மீது
"போன்ஸாய்" மரம் ஆக்கி
அதன் நாடி பிடித்து
பார்க்கத்துவங்கும் காலத்தின்
ஒரு புதிய விளிம்புக்கு வந்திருக்கிறான்.


மனிதனின் மூளையே
கோவில்களுக்கெல்லாம் பெரியகோவில்.
அதை கூர்தீட்டி
அதன் பொறிகளில் தீமூட்டி
வெளிச்ச வெளியில் மிதந்து கொண்டிரு.
நீயே கடவுள் என்பதே
உண்மையிலும் உண்மை.
இன்னும் இது போல்
ஆயிரம் பிரபஞ்சங்களை
உன் அறிவியல் சிந்தனை
எனும் சோதனைக்குழாயில்
நீ உருவாக்க முடியும்.
அதைத் தடுக்க உன்னை
அனக்கோண்டா பாம்பாக
சுற்றிக்கொள்ள வருவதே
மதம் பற்றிய எண்ண நொதிப்புகள்.
இந்தப்போதையில் நீ
மூழ்கினால்
ஓ மனிதா!
நீ உன் பாதை இழப்பாய்.
நீ பயணம் இழப்பாய்.
இந்த மதக் குப்பைகளை அகற்று.


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக