புதன், 26 செப்டம்பர், 2018

கவுடபாத காரிகை

கவுடபாத காரிகை
===========================================ருத்ரா


ஆத்மீகவாதிகள் தூக்கிப்பிடிக்கும்
"ஆத்மா" என்பது
இலக்கணத்தில் "தன்மையை"க் குறிக்கிறது.
கடவுளைத்தேடாதே.
அது வெளியில் இல்லை.
அது "நான்" தான் என்று
(அஹம் ப்ரமாஸ்மின்")
"நீ" உணரவேண்டும்.
இப்போது நான் (ஆத்மா) என்ற "தன்மை"
நீ எனும் "முன்னிலை"க்கு வருகிறது.
நீ உணர்ந்த பின் அந்த கடவுளே
சொல்கிறான் உன்னிடம்
"தத்வம் அஸி"
"நீயே அதுவாக இருக்கிறாய் என்று."
இங்கே "தத்" அது
(அல்லது அவன் ,பிரம்மா சிவன் பார்வதி விநாயகன் விஷ்ணு லக்ஷ்மி
எக்செட்ரா எக்செட்ரா....)எல்லாம்"
இலக்கணத்தில் "படர்க்கை" ஆகிறது.
எனவே கடவுளின் இலக்கணத்தில்
"நான் நீ அவன் அது அந்த..." எல்லாம்
மறைந்து போகிறது.
கடவுள் என்பதை
தேடுவதே தேவையற்றது ஆகிவிடுகிறது.
முற்றிய ஆத்மீகம் அதை விட முற்றிய‌
நாத்திகம் என்று ஆகி விடுகிறது.

கவுடபாதர் தான் எழுதிய கவுடபாத காரிகையின்
கடைசி வரிகளைப்பாருங்கள்.
இது நூறாவது ஸ்லோகம்.

கவுடபாதரின் காரிகை ஒரு ஆழ்ந்த குகை.
அதில் நுழைந்தவன் தட்டு தடுமாறி
ஆத்திகன் நாத்திகன் ஆகி விடுகிறான்.

இதோ ஸ்லோகம்

துர்தர்ஸனம் அதிகம்பீரம் அஜம் சாம்யம் விஸாரதம்
புத்த அபதமனானத்வம் நமஸ்குர்மோம் யதா பலம்.

ஆத்மிகத்தின் சூட்சுமமே நாத்திகத்தில் இருக்கிறது.

அது எப்படி?

(தொடரும்)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக