சனி, 7 அக்டோபர், 2017

மூட்டைப்பூச்சிகள்




மூட்டைப்பூச்சிகள்
=======================================ருத்ரா

உன்னிடம் சரணடைந்தேன்.
இனி என்கால்கள் உன் சுவட்டில்.
என் பார்வைகள் உன் விழியில்.
என் கனவுகள்
தினம் தினம் நீ
அவிழ்த்தெறியும் பூச்சரங்கள்.
என் முகத்தை நீ
இன்னும் பார்க்கவில்லை.
என் சொல் உன் செவியில்
இன்னும் விழுந்ததில்லை.
நீ இன்றி
இந்த வாழ்க்கையெல்லாம்
வெறும் தூசு துரும்புகள்.
என்னைக்காதலிக்கவில்லை
என்றாவது
என் முகம் பார்த்து சொல்லிவிடு.
அது போதும்.
அந்த கல்லறையில் நான் தூங்க..
அந்த தூங்குமூஞ்சி மரங்களின்
சிறு சிறு சாமரங்களைப்போன்ற‌
அந்த பூக்கள்தாலாட்டும் 
அது போதும்.
அது தூவும் மகரந்தங்கள் எல்லாம்
உன் நினைவு தான்.
பயப்படாதே
நான் இன்னும் சாகவில்லை.
நான் போகும்போதும் வரும்போதும்
அந்த பாதையில்
உள்ள கல்லறைத்தொட்டத்தில்
ஒரு இடம் பார்த்திருக்கிறேன்.
செண்ட் அதிக விலையில்லை.
ஒரு மூட்டைப்பூச்சி 
மருந்து பாட்டிலின் விலை தான்.
.....
.........
"டமார்."

எதிரே வரும் லாரி மரத்தில் மோத‌
நடுவில் நான் நசுங்கினேன்.
ஆனால் 
என்ன ஆச்சரியம்
நான் பிழைத்துக்கொண்டேன்.
அதில் நசுங்கி கூழாகி இறந்தது
அந்த காதல் மட்டுமே!
அந்த மருந்து பாட்டிலின் மருந்தை
தெளிக்காமலேயே
என்னை பிச்சு பிச்சுக்கடித்த‌
காதல் எனும் மூட்டைப்பூச்சிகள்
செத்தே போயின!

=================================================

Click here to Reply

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக