செவ்வாய், 17 அக்டோபர், 2017

நரகாசுரனுக்கு ஒரு வெடி

நரகாசுரனுக்கு ஒரு வெடி
=============================================ருத்ரா

மிகப்பெரிதாய் ஒரு வெடி வாங்கி
அந்த நரகாசுரன் மீது வெடித்தோம்.
அப்புறம் காகிதத்துகளாய்
சிதறிக்கிடந்தது உண்மைதான்.
ஆனால்
அது வெடியின் காகிதச்சிதறல் அல்ல.
வெடித்துச்சிதறியவன்
நரகாசுரனும் அல்ல.
அவையாவும்
காசுக்கு கொடுத்த நம் ஓட்டுசீட்டுகள்.
வெடித்து வீழ்ந்ததும்
நாம் தான்! நாம் தான்! நாமே தான்!
நரகாசுரன் நமக்குச்சொன்னான்
ஹேப்பி தீபாவளி! ஹேப்பி தீபாவளி!

ஆயிரம் அசுரன்களை
அழிக்கப்பிறந்தவன் இந்த‌
மானிட நரன்!
இவன் எப்படி நரகாசுரன் ஆவான்?
கடவுளுக்கும் உறைத்தது.
கடவுள்  "கடவுள் சாட்சியாக சொன்னான்"
நான் கடவுள் இல்லை என்று.
காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் மூல‌
காட்டுமிராண்டி நான் தானே!
மனிதனை பாவம் செய்யவைத்துவிட்டு
அவனுக்கு
பாவத்தின் சம்பளம் மரணம் என்று
பட்டாக்கத்தியை அவனுக்குள்
பாய்ச்சுபவன் நான் என்றால்
நானே தான் காட்டுமிராண்டி!

==============================================




2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அருமை
உங்கள் அனைவரின் கவலைகளும் வெடியாய் வெடித்து சிதற...
மகிழ்ச்சி மத்தாப்பூவாய் மலர....
வாழ்க்கை ராக்கெட்டாய் உயர...
குடும்பம் கல்பட்டாசாய் கலகலத்து மகிழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

"அருமையான" தீபாவளி வாழ்த்துக்கு நன்றி ராஜி அவர்களே.

அன்புடன்
தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக