வெள்ளி, 13 அக்டோபர், 2017

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
=======================================ருத்ரா


வெண்சாமரம்

எங்கோ மெக்சிகோவில்
எரிமலை நெருப்பு உமிழ்ந்ததாமே.
உன் கண்கள் என்னைத்தவிர்த்து
நெருப்பு உமிழ்வதை விடவா?
மெக்சிகோ எரிமலை
வெறும் வெண்சாமரம்!

___________________________________________

புதிர் வீச்சு

பெண்ணே
உன் புதிரின் கதிர்வீச்சு
அகப்படுவதற்கு
என்னிடம் கருவிகள் ஏதுமில்லை.
கனவுகளைத்தூவும்
அந்த சிற்கு முளைத்த‌
பிக்காஸோக்களைத்தான்
கேட்கவேண்டும்.
வண்ணங்கள் கொண்டு குழப்பும்
அந்த பட்டாம்பூச்சிகளைச் சொல்கிறேன்.

______________________________________________


ஒரு தீபாவளி


திடீரென்று அலைபேசியில்
வந்தாய்.
பட்டன் தட்டி பட படத்தேன்.
அதற்குள் ஏதோ
ஒரு மாயம் எனக்கு
நெருக்கடி நிலையை
பிரகடனம் செய்தது.
இதோ வந்து விடலாம்
என்று
கைபேசியை வைத்துவிட்டு
சென்றேன்.
சிலநொடிகளில்
திரும்பிவிட்டேன்.
ஆனால் அதற்குள்
எள்ளும் கொள்ளும் வெடித்து
ஆயிரம் வாலாக்களாய்
அங்கு எல்லாமே
தூள் தூள்..

__________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக