வியாழன், 12 அக்டோபர், 2017

கீழடி

கீழடி
==============================ருத்ரா.

குழி தோண்டினார்கள்
தமிழின் தொன்மைக்கு.
ஆம் அதை புதைக்கத்தான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________

தமிழனே
படுத்துதான் கிடக்கிறான்.
அவன் "ஆறடிக்குழியில்"

______________________________________

போகட்டும்.
நான் "வையாபுரி" பேசுகிறேன்.
சமஸ்கிருதத்திலிருந்து தான் த‌மிழ் வந்தது.
அதற்காவது
குழியைத்தோண்டிபாருங்கள்.

______________________________________

அகநானூறு புறநானூறு போக
இன்னும் கிடைக்கும்
அந்த வெட்டாத குழியில்
"தமிழ் ஞாயிறுகள்"

‍‍‍‍‍‍‍‍‍_________________________________________


இனி வெட்டவேண்டியது இந்த
மண்ணை அல்ல.
சம்ஸ்கிருத சொற்களைத்தான்
அதனுள்ளே
அதன் வேர்கள் அத்தனையும்
தமிழ் தமிழ் தமிழே தான்!

-------------------------------------------------------------



2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

பாராட்டுக்கு மிக நன்றி

கருத்துரையிடுக