ஞாயிறு, 15 அக்டோபர், 2017

உற்றுப்பார் உன் கண்ணாடியை






























உற்றுப்பார் உன் கண்ணாடியை
=============================================ருத்ரா

ஏன் வளையவேன்டும்?
எதற்கு இந்த மண்டியிடல்?
கவலைகளும் துயரங்களும்
அந்துப்பூச்சிகளாய்
நம் வாழ்க்கைப்பக்கங்களை
அரித்துத்தின்பதா?
வலியின் எல்லைக்கோடு
உடலின் விளிம்புகள்.
மனச்சிதைவின் கோடரிமுனைகள்
உன் கண்ணாடி பிம்பத்தை
தூளாக்க விட்டு விடாதே!
அந்த பிம்பத்தோடு நீ
உன் தலைவாரிக்கொள்வதோடு மட்டும்
நிறுத்திக்கொள்வதில்லையே.
இந்த துன்பங்களின்
ஏழு சமுத்திரங்களும் உன்னை
மூழ்கடிக்க வரும்போது
இதைப்பார்த்து
கட கட வென்று ஒரு வெடிச்சிரிப்பு செய்.
உன் அவநம்பிக்கைகள்
உன் காலடியில் தூள் தூள்..
ஆம்..
உன்னையே நீ
உற்றுப்பார்.
கோடி உலகங்கள்
உன் இமைச்சிமிட்டலில்
உன் ஆணைகள் கேட்டு நிற்கும்.
உற்றுப்பார் உன் கண்ணாடியை.

===================================================




2 கருத்துகள்:

கருத்துரையிடுக