புதன், 11 அக்டோபர், 2017

சிவாஜி எத்தனை சிவாஜி (3)

சிவாஜி எத்தனை சிவாஜி (3)
============================================ருத்ரா


சம்பூர்ணராமாயணம்


சிவாஜி
பரதனாய் வந்த சில நிமிடங்களில்
அண்ணன் மீதுள்ள அன்புக்கு
அவன் சீறிய சீற்றம் ஆயிரம் புயல்கள்.
அரண்மனை கிடுகிடுத்தது.
அந்த துடிப்பான நடிப்பை
ஏன் அந்த வால்மீகியே பார்த்திருந்தால்
புதிதாய் ஒரு "பரதாயணம்"
எழுதலாமோ என சிந்தித்திருப்பான்.
மதிப்பிற்குரிய நம் மூதறிஞர்கூட‌
மகுடம் சூட்டினார் அந்த நடிப்பிற்கு.

______________________________________________


மக்களைப்பெற்ற மகராசி


மணப்பாரை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
உழ வந்த சிவாஜி அந்த‌
கொங்குச்சீமையின் தங்கத்தமிழை
புடம்போட்டு அப்படியே காட்டுகிறார்.
"எண்ரா பல்லக்காட்ர தண்ணிய சேந்து"
என்று அந்த மண்ணின் மொழியை
அந்த மாட்டோடு பேசி
நம்மை சிலிர்க்க வைத்துவிடுகிறார்.

______________________________________________

பாவை விளக்கு


அகிலன் அவர்களின் நாவலின்
நரம்போட்டமே
கதாநாயகன் தன் வாழ்க்கையின்
குறுக்கே வரும் அந்த ஊமைக்காதலின்
அக்கினி ஆறுகளை கடப்பது தான்.
சிவாஜியின் நடிப்பு
அந்த ஐந்து முகக் காதல்பூவை
தன் நெஞ்சுக்குள் ஒரு போன்சாய் மரமாய்
குறுக்கிக்கொண்டு
மத்தாப்பு உணர்ச்சிகளைக் காட்டும் விதம்
மிக மிக அருமை!
வண்ணத்தமிழ்ப்பெண்ணொருத்தி...
காவியமா இல்லை ஓவியமா..என்று
இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களை
சிவாஜி தன் முகஅசைவுகளிலேயே இசைத்துக்காட்டி
ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.

__________________________________________________
(தொடரும்)


2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மகிழ்ச்சி.நன்றி.ஊக்கம் தரும் உங்கள் "அருமை" எனும் சொல்
எனக்கு வற்றாத கவிதைகளின் ஊற்று.

கருத்துரையிடுக