செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஒரு கற்பனை

ஒரு கற்பனை
=====================================ருத்ரா


வீட்டு முற்றத்தில்
ஹாயாக உட்காந்து
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்
கவிவேந்தர்.
"எங்கு இருக்கிறாய் தமிழே!..நீ
எங்கு இருக்கிறாய்  தமிழே.."

சட்..அடிக்கிறார்
கையில் ஒரு கொசு.

"எங்கு இருக்கிறாய் தமிழே நீ
"டெங்கு" வாக இருக்கிறாய்  தமிழே.."

"போதும்.
கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை."
கவிஞர்
காகிதத்தை கசக்கி எறிகிறார்.
"போங்கடா!
நீங்களும் உங்கள் தமிழ்நாடும்."
கவிச்சிங்கம் சீறி விட்டு
எழுந்து சென்றது.

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக