வெள்ளி, 19 ஜூன், 2020

வாழ்க இந்தியா!

வாழ்க இந்தியா!
==========================================ருத்ரா

பன்றிக்கொழுப்பு
தடவிய தோட்டாக்களும்
பசுக்கொழுப்பு
தடவிய தோட்டாக்களும்
அன்று
ஒரே தோட்டாவாய் சீறியதில்
பூத்தது தான்
நம் மூவர்ண ரோஜா!
இன்று நாம்
தோட்டாக்களில்
நான்கு வர்ணம் பூசாமல்
கூர்மையோடு பாய்ச்சுவோம்.
நம் தேசத்தை 
எந்த கோணத்தில் இருந்து
பார்த்தாலும் அது
கோவிலாக‌
மசூதியாக‌
தேவாலயமாகத் தான் 
தெரியும்.
ஆனால் உள்ளிருக்கும்
தெய்வமோ
ஜனநாயகம் ஜனநாயகம்
ஜனநாயகம் மட்டுமே!
மனித நேயத்தின்
சமநீதித் தராசுகோல்
செங்குத்தாகவே இருக்கும் வரை
நம் தேசத்து ராணுவம் தான்
உலகத்திலேயே 
பலம் வாய்ந்தது.
வெள்ளிப்பனிமலை
மீது உலாவுவோம்
ஆனால்
அங்கே வானத்தில்
அங்கே வீசும் காற்றில்
எல்லாம்
நம் கண்முளைத்து
காவல் செய்குவோம்.
ந‌ம் வீரர்களே
நம் இதயத்துடிப்புகள்.
வாழ்க இந்தியா!
வெல்க இந்தியா!

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக