செவ்வாய், 16 ஜூன், 2020

ஒரு சொற்பொழிவு

ஒரு சொற்பொழிவு

==========================================ருத்ரா

கம்பராமாயணம்

சொற்பொழிவு மழைகளின்

ஊற்று.

ஒரு வேடன் கிரவுஞ்சபட்சிகளில்

ஒன்றை அம்பெய்ய அது வீழ்ந்தது.

இணையான மற்ற பறவையும்

பிரிவின் துயரம் தாங்காமல்

வீழ்ந்து இறந்தது.

வேடனுக்கு பறவையின் மாமிசம்

அவன் வயிற்றுப்பசிக்கு உணவு

அவ்வளவு தான்.

ஆனாலும் அந்த பறவையின்

பிரிவுத்துயரம்

கண்ணுக்குத்தெரியாத ஒரு அம்பாய்

வேடனைக்குத்தி துளைத்தது.

ராமனும்

தசரதனும்

பாத்திரங்கள் ஏந்தி வந்தார்கள்

அந்த வேடன் எழுதிய ஏடுகளில்

அரங்கேறினார்கள்.

ஆடு மேய்த்தவன் காளிதாசன் ஆகி

சமஸ்கிருத இலக்கியங்கள் படைத்த‌

தேசம் அல்லவா.

காளிதாசனுக்கு முந்தியே

இந்த வேடனும்

ஒரு "இதிகாசம்"படைக்கும் புலவன்

ஆகிவிட்டான்.

இடையே

நாரதர் தூண்டுதல் மற்றும் ஊக்கங்கள்

கொடுத்தார்.

இதில் இன்னுமொரு

முக்கியமான "பாத்திரம்" இருக்கிறது.

அது தான் "மரா மரம்"

இது தான் வேடனை ராமன் பெயரை

ஒலிக்க உதவியது.

ஆனால்

இதில் ஒரு பேருண்மை ஒளிந்து கிடக்கிறது.

அந்தக்காடு

அந்த மராமரம்

எல்லாம் நம் தமிழின் சங்ககால இலக்கியத்தில்

இருக்கிறது.

மரவமும் குரவமும் மிகுந்த

காடு பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

மரவ மரம் தான் அங்கே மரா மரமாய்

ராமன் பெயரை ஒலிக்கிறது.

இன்னும் மரா மரம் ராமனைத்தொடர்ந்தே

பயணிக்கிறது.

வாலியை நேரடியாக வதம் செய்யுக்கூசி

அம்பை ஏழுமராமரங்களை துளைத்து

எய்தியதாக வருகிறது.


வான்மீகியார் என்ற‌

சங்ககாலப்புலவர் ஒரு பாடல்

எழுதியிருக்கிறார்.

புறநானூறு 358 ஆம் பாடல்.

இவர் ஏன் அவராயிருக்கக்கூடாது

என்று 

நாம் கேட்டால்

அவர் ஏன் இவராயிருக்கக்கூடாது

என்று அவர்கள் கேட்கமாட்டார்கள்.

ஏனெனில்

அவர்கள் உடம்பெல்லாம் மூளை

மூளையெல்லாம் சிந்தனை.

சிந்தனை எல்லாம் வஞ்சனை

என்று

பேரறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்.

அவர்கள் 

இப்படித்தான் சொல்வார்கள்.

அவர்கள் இவரை அவர் தான்

என்று 

சொல்லிவிட்டால் 

இராமாயணப்பழமை என்ன வாகும்?

ராமன் லட்சக்கணக்கான வருடங்களுக்கு

முன் பிறந்தவன் அல்லவா

அவர்கள் "கதைப்பு"படி?

ஆனால்

வடநாட்டு வால்மீகி என்ற பெயர்

சங்கத்தமிழ்ப் புலவர்களுக்கும்

இருந்திருக்கலாம்.

நம் வால்மீகியும்

புற்றுக்களிடையே தவம் இருந்தவர்

என்று 

ஆசிரியர் குறிப்பு சொல்கிறது.

இவர் எழுதிய பாடலும் 

துறவறத்தை வற்புறுத்துகிறது.

ஏன்

சங்கப்புலவர்களும்

வாழ்வின் நிலையாமையைப் பற்றி

வலியுறுத்தி பாடியிருக்கிறார்களே.

ஆனால் வால்மீகி என்ற வடசொல்

நம் மடியில் உட்கார்ந்து

பல காலமாய் விளையாடிக்கொண்டிருந்தது.

வடசொல்லும் தென்சொல்லும்

தமிழ் தான் என்பதும் 

நமக்கு தெளிவாய் தெரிகிறது.

ஆனால் 

இந்த பகைமை

கிரேக்க மொழியின் 

அத்தீனிய ஸ்பார்ட்டா போன்ற‌

உட்பிரிவுப்பகை போன்றதாக 

இருக்கலாம்.

நிறை மொழி எனும் தமிழும்

மறைமொழி எனும் 

மறைந்து போகும் நிலையில்

உள்ள வட தமிழும் 

தொல்காப்பியர் எழுத்துக்குள்ளும்

கலந்து நிரவி இருக்கின்றன.

வால்மீகித் தமிழ் என்ன பாடுகிறது

என்று பார்ப்போம்.(புறம் 358)



"பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

ஒரு பகல் எழுவர் எய்தி யற்றே!

வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆதலின்

கை விட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடாஅள் திருவே;

விடாஅ தோர் இவள் விடப்பட்டோரே."


ஒரு பகல் எழுவர் எய்தியற்றே 

என்ற வரியில் 

ஒரே நாளில் அரசர்கள் மாறிவிடுவர்.

சுற்றிலும் சூழ்ந்திருக்கும் பகையால்.

எனக் கூறுகிறார்.

தவம் செய்பவன் முன் அரசன் தூசி

என்பது அவர் கருத்து.

ஆனால்

கைவிட்டனரே காதல் 

என்று காதலை இங்கு

ஏன் சொல்லுகிறார்?

"தவத்துக்கு"இல்லறம் உதவாது.

இல்லறம் 

காதலின் மேல் கட்டப்பட்டது

அதனால் 

அப்படி எழுதுகிறார்.

அது சரி 

வால்மீகி என்ற துறவி இப்படி 

காதல் பற்றி எல்லாம் 

எழுதுகிறாரே 

என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் 

வால்மீகியின் கம்பராமாயணத்தில் 

"அகமும் புறமும்" நிரவியே 

எழுதப்பட்டிருக்கிறது.

இதை வைத்தே அவர் தமிழ் வால்மீகி 

என்று சொல்லிவிடலாம்.

அண்ணா அவர்கள் 

அந்த "அகப்பாடல்களையெல்லாம்" 

கம்பரசமாய் நமக்கு காட்டினார்.

இதில் உள்ள 

உண்மை ஆராய்சசிக்குட்பட்டது.

================================================

(சொற்பொழிவு தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக