திங்கள், 8 ஜூன், 2020

முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே

"முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே"
=========================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ..32)




எரிபட்டன்ன நோன்றாள் அழுதாள்
இடைபட்ட கலிங்கம் நீள்நெடும்பாம்பாய்
முறுக்கிய வலியில் துடித்தாள் மன்னே.
நெருநல் ஞாழல கரையிடை அவன் தோள்
தோய் தழீஇய இன்பம் ஈண்டு யாங்கண்
தீக்கடல் திரைமலி அழல் நனந்தலை
தோற்றிய துன்பம் அமிழ்ந்தனள் என் கொல் ?
அமர்க்கண் நெடுந்தகை  மார்பின் எஃகம் 
மணிப்புண் பிளப்ப வென்றி எடுத்தாங்கு 
குருதிக்கண்ணே சிறை சிறை அடித்து 
கொடிய வெம்புள் ஊடு ஊடு கலித்து 
அலமரல் ஆர்த்தன்ன அவன் அமை நெடுந்தோள் 
சேர்தல் ஆற்றா இடும்பை படுத்தாள்.
ஒரு கண் முரசு பச்சை அதிர 
படு களம் பட்டானை இறை தொடி நெகிழ 
அணைத்த காலை செயிர்த்த அன்பில் 
அவள் "முயக்கிடை ஈயாது மொய்த்தன 
பருந்தே" போல் அவன்  "பொருள் வயின்"செலவு 
மாறு கொள்ளும் தழுவல் தடுக்கும் இவட்கு 
ஊழே இங்கு பருந்தின் கூர் நகம் 
பாழே பாழே வறட்டும் நீள் இரவு.


===============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக