செவ்வாய், 9 ஜூன், 2020

அன்புடன் ருத்ரா

அன்புடன் ருத்ரா
_____________________________________________



பைபிள் என்னும் நூல்
தூக்கிப்பிடித்துக்காட்டப்படுகிறது.
இங்கே
பகவத் கீதை உயர்த்திக்காட்டப்படுவது போல்.
இவை வரலாற்றுக்கண்ணாடிகள் தான்.
பழைய நிகழ்வுகளின்
பிம்பங்கள் நம்மீது 
பூச்சாண்டி காட்டப்படுகின்றன.
மனிதர்கள் வறுமையில்
கொத்து கொத்தாக மடிகிறார்கள்.
வலுத்த மனிதர்கள் 
இளைத்த மனிதர்களை
கொத்துக்கறி கைம்மா போடும் போதெல்லாம்
இந்த நூல்கள் தூசி படிந்து கிடக்கும்.
இதைக்கண்டு
சமுதாயச்சீற்றம் கொண்டு
மனிதநேயம் உள்ள குரல்கள்
கிளர்ந்து எழுகையில்
இந்த பூங்கொத்துகள் போன்ற‌
போதனைகளில் 
அம்புஷ் செய்யப்பட்ட 
கொலை ஆயுதங்கள் விஸ்வரூபம் எடுக்கும்.
ஓட்டுகள் தந்த கைகளே
இங்கு முறித்து வீசப்படும்.
சரித்திரத்தின் சக்கரங்கள் 
உருண்ட வழித்தடம் இது.
உலக மகா யுத்தங்கள்
கொள்ளை நோய்கள் 
இவையெல்லாம்
மனித உயிர்களை 
லட்சக்கணக்காய் தின்று தீர்த்துவிட்டன.
வெறியை ஆயுதமாக்கி கூடமாக்கி கோபுரமாக்கி
மக்கள் மீது கண்ணுக்குத்தெரியாத‌
இறைவம் எனும் சல்லாத்துணியை
வீசி 
மனிதனின் அறிவுக்கண்களை
மழுங்கடிக்கச்செய்யும் சம்பவங்களே
இந்த உலகை கொள்ளைகொள்ளும்
கொரோனா.
கொரோனாக்கள் பாவம்.
பொருளாதாரம் எனும் வாழ்க்கை நெறிகள்
மனித வாழ்க்கையையே 
கழுத்து நெரிக்கும் கோட்பாடுகளால்
கசக்கி கூழாக்க காரணமாய் இருப்பது
அந்த லாபநோக்கம் எனும் வைரஸ் தான்.
செல்களின் அதீத வளர்ச்சி தானே வைரஸ்
அது போன்ற இந்த "வளர்ச்சி"வெறி தான்
மனிதர்களை காவு வாங்குகிறது.
பகாசுர பளபளப்பான கட்டிடங்கள்
நல்ல பாம்பு படங்களைப்போன்ற‌
கவர்ச்சி காட்டி 
உலகின் நலிந்த மூலைகளை
இன்னும் தரைமட்டமாக்கிவிடும்
பொருளாதாரத்தின் மாயவலையை
விரித்துக்கொண்டிருக்கின்றன.
இதை "பரமண்டலம்" எனும் பால்கனியில்
உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருக்கும்
தெய்வங்களையே நமக்கு
பொம்மைகளாக்கி
"டாய்ஸ்டோரி" ஒன்று இரண்டு மூன்று..
என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மனித சிந்தனையில் இந்தக்குப்பைகளை
எரிக்கும் காட்டுத்தீ தான்
நமக்கு விடியல்.
தினம் தினம் விழிக்கும் இந்த‌
சூரியன்கள் அல்ல!

=======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக