வெள்ளி, 12 ஜூன், 2020

"பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப"

"பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப"
_____________________________________________ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் 33)




மடக்குரல் விளிதரும் அகல்பேரலகின்
கூர்த்த ஓதை கூஉய் வௌவ்வும் படர்வான்
அரிப்பறை அன்ன அறையும் விரிசிறை
பவளம் சமைத்த நெடுங்கால் நாரை
சினையுடன் சிமைக்கும் பருங்கயல் கொள்ளும்.
உடைமுள் இடையும் அவிழ் பூம்பிணியின்
தண்மைசெறி அரி இலஞ்சி காட்சியில் 
இடையிட்ட இடையிட்ட நீர் நிழல் அயல
குவளைகள் காட்டிய அவள் விழி வீழ்ந்தான்.
தீம்தொடை நரம்பின் பச்சைப் பேரியாழ்
பண் விடுத்த பாங்கில் அவள் கண்விடு அம்பின்
இரைப்பட்டான் கழை அடுக்க வெற்பன் ஆங்கு.
பிளந்த வாய் பெரும்பேய் அத்தம் வெள்ளிய
பறந்தலை நோக்கி உகுக்கும் இகுக்கும் அவன்
தீப்படர் மூச்சு அற்றை நாளில் அவள் இதழ் உதிர்
நகையின் நுண்மாண் மணியென இரைப்பத் 
தந்த வள்ளுறைக் கவின் நனி நீளிடை
பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப
சுரன் வழங்கு ஆற்றிடை விண்மீன் குழாஅம்   என 
பொறி அறை படுத்து மயங்கினன் என் கொல்?

-------------------------------------------------------------------------------------

இது அகநானூற்றுப்பாடல் 291ல் "பாலை பாடிய பெருங்கடுங்கோ "
எழுதிய "பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப" என்னும் வரியின் 
நுட்பமான அழகை எடுத்துக்கொண்டு என்னால் எழுதப்பட்ட 
சங்கநடைச் செய்யுட் கவிதை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக