வெள்ளி, 12 ஜூன், 2020

ஞாபகம் வருகிறதா கண்ணே!



ஞாபகம் வருகிறதா கண்ணே!
உன் பெயர் "டையானா" என்று
இருந்ததை
நான் தான் மாற்றினேன் "கொரோனா" என்று.
நீயே என் மணிமகுடம்
என்று அன்போடு அந்தப்பெயரில்
அழைத்தேன் உன்னை.

ஆனால் இன்று
கொரோனா என்று
இந்த உலகமெல்லாம்
மூச்சு விட்டு  மூச்சு விட்டு
உன்னைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
செவிலியர் பணிக்குப்போகிறேன்

என்றாய் ஒருநாள்.
நானும் அன்போடு
இதயம்  குழைய "பை" சொன்னேனே .

திடீரென்று ஒரு நாள்
உன்னை
அந்த
பூ வேலைப்பாடு நிறைந்த
பெட்டியில்  அடைத்து அனுப்பிவிட்டார்களே.
தினமும்
லட்சம் லட்சம் என்று
இந்த ஊடகங்கள்
புள்ளிவிவரங்கள்
என்ற பெயரில்
உன் பெயர் மீது என்னை
ஆணி அறைந்து கொண்டிருக்கிறார்கள்.
என்னால் முடியவில்லை.
விதிமீறல்களின் வழியாய்
நீ என்னைத்தொற்றிக்கொள்
என்று
இந்த ஈசல் கூட்டங்களுக்குள்
கலந்து கொண்டு விட்டேன்
கையோடு
எனக்கும் ஒரு பெட்டியை
ஆர்டர் கொடுத்துவிட்டு.

=======================================ருத்ரா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக