வியாழன், 25 ஜூன், 2020

இருட்டுக்கடை

இருட்டுக்கடை
=========================================ருத்ரா

இருட்டுக்கடை என்றாலும்
ஆயிரம் வாடிக்கையாளர்களின்
முக வெளிச்சம் அது.
இனிப்பு என்றாலே
அல்வா தான்.
அதற்கு ஏது மரணம்?
தொழில் அக்கறையில்
அன்போடு பிசைந்து தரும்
அந்த இனிப்பின் செழிப்பில்
லயித்துப்போன‌
நெல்லைச்சீமையே 
அங்கு சுருண்டு கிடக்கும்.
அந்த இனிப்பு 
திருநெல்வேலி தாமிரபரணியிலும் 
குமிழி விட்டுக்கொண்டிருக்கும்.
வரிசையில் நின்று
அல்வா வாங்கித்தின்ற
எமனுக்கு பயம் வந்து விட்டது.
இந்த அல்வாவை வைத்து
எமன்களுக்கே 
அல்வா கொடுத்துவிடுவானோ?
அவன் பயந்து போய்
தன் எருமைக்குப்பதில்
கொரோனாவை ஏவி விட்டான்.
அன்னார் மறைவுக்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்.


_____________________________________








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக