ஞாயிறு, 21 ஜூன், 2020

"ஊக்கு அருங் கவலை நீந்தி"

"ஊக்கு அருங் கவலை நீந்தி"
===========================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ..34)


ஒரு சொல்லும் உதிரா கடுவாய் இறுப்ப‌

குவளை உண்கண் இமை அவிழ் மறுக்க‌
குளிர்மதி குறைந்து மதிப்பின்னீர‌
தேய்ந்த புன்னகை பாம்புரி அன்ன‌
முகம் மறைத்து பூஞ்சினம் காட்டினள் என்?
என்ன கணு அமை ஒத்த கவின் தோள் மல்லன்
வினாஅய் வெருவி நின்றக்கால் அணியிழைத்தோழி
ஆர்த்த கலியில் சொல்லின் அருவி தண்ணிய‌
பாசிடை வீழ் ஒலி தடாரி முழக்கின் 
தளிர் இடை முரலும் இன்னொலி மிழற்ற‌
பறையும் அரிகுரல் கேட்டனன் ஆங்கே.
ஆறு அலை வன் தொழில் கொள்ளையில்
முளி படு பொரிபடு முள்ளின் ஓமை
சாய்க்கும் வரிமா எதிர்ப்படும் போழ்தும்
புற்றம் நுழைத்த  நீள்வாய்க்கொடு எயிற்று
குரூஉ மயிர் யாக்கைய எண்கின் 
வள்ளுகிர் கூர்படு பேழ்க்கையின் போழ்தும் 
பசுங்குடுமிய மரம்செறி மன்று 
கடற்ற சுரத்து வறள் நெடு பரந்தலை 
பாழிடம் சேர்ந்து நோன்ற போழ்தும் 
கடை கோல் தளிர்த்த சிறு தீ அன்ன 
செம்பிஞ்சின் அடர்தந்த பசலை நோயின் 
இடர்ப்பட்டாள் உடலுடன் உடன்றாள் 
நின்னை உள்ளியும் பெருந்தீ ஆங்கே 
பற்றிக்கிடந்து  அழல் தழீஇய போழ்தும் 
ஊக்கு அருங்கவலை நீந்தி 
ஊர்தரும் தமியன் நின்பால் 
உருக்கிடை நெய்யென துடிப்பது 
நினை உலுக்கியது எவன் நீ 
உணராபோல் நீள்சுரம் கடாஅய் இறந்தாய்?

===============================











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக