திங்கள், 15 ஜூன், 2020

தரிசனம்.


photo of coronavirus
நன்றி .."கூகிள் இமேஜஸ்"
https://www.google.com/search?sxsrf=ALeKk03uZERwHh41blWXn-KV0294rpF4OQ:1592285351419&source=univ&tbm=isch&q=picture+of+corona&sa=X&ved=2ahUKEwiPjoKWzYXqAhWv_XMBHRaUB30Q7Al6BAgJEBk&biw=1042&bih=619&dpr=2.5#imgrc=K_lwiK_83zAqvM



தரிசனம்.
==================================ருத்ரா

ஒரு வழியாய்
கர்ப்பகிருகம் வந்தாயிற்று.
திவ்ய அலங்காரம்..
வைர மகுடம் கதிர் வீசியது.
......
.......
ஜருகண்டி..ஜருகண்டி

கொஞ்சம்
அரை நிமிடம்
அந்த முக தரிசனம்..
குழறினேன்.

ஜருகண்டி ..ஜருகண்டி..
இது டவாலியின்
சுப்ரபாதம்.

வரிசை வெளியே என்னைத்
தள்ளிக்கொண்டு வந்து விட்டது.
எனக்கு முன்னே
மிகவும் முதியவர் ஒருவர்.
முகம் தெரியாமல்
தாடி மீசையுடன் நின்றிருந்தார்.
அந்த நீண்ட தாடி
வால்மீகியை ஞாபகப்படுத்தியது.
என்னப்பா..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயே.
அப்படியுமா தரிசனம் செய்யவில்லை.
ஆமாம் ஸ்வாமிகளே
பகவானின் அந்த வைரக்கிரீடத்தை
மட்டுமே தான்
பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
திடீரென்று
நான் அதுவரை நினைத்துக்கொண்டே
வந்த கொரோனாவின்
அந்த முள்ளுக்கிரிடம் தான் தெரிந்தது.
அப்புறம் தான்
சுய நினைவுக்குத்திரும்பி
பெருமாளின் அந்த திவ்ய நாமமும்
முகமும்
ஒன்றுக்கொன்று இழைந்திருந்து
தரிசனம் தருமே
அதைப்பார்க்க முடியாமல்
இந்த ஜருகண்டி என்னைத்
தள்ளிக்கொண்டு வந்து விட்டது.
அது தான் இத்தனை ஆதங்கம்.

தம்பி கவலைப்படாதே
அவர்
தூணிலும் இருந்து
துரும்பிலும் இருந்து
சலிப்பு அடைந்து விட்டார்.
அதனால் தான்
இப்போ
இந்த கொரோனாவில் இருக்கிறார்.
அவதாரம் இன்னும்
பாக்கி இருக்கிறது அல்லவா..
பெரியவர்
சிரித்துக்கொண்டே
போய்விட்டார்.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக