புதன், 31 மே, 2017

ஒரு பதவியேற்பு !

ஒரு பதவியேற்பு !
=====================================================ருத்ரா

ராஷ்ட்ரபதி மாளிகையில் ஒரே பரபரப்பு
க்யா பாத் ஹெ?
குச் நை ஜாந்தா?
ஃபிர் க்யோம் இத்னா ஹல்சல்.?
எனக்கு தெரியாதுபா?
அதற்கு மேல் அந்த வேட்டி கட்டிய‌
மத்ராஸிகள்
மௌனம் ஆகினர்.
ராம் கி ஜிந்தா பாத்!
அனுமன் கி ஜிந்தா பாத்!
பிச்சு பிச்சு போட்ட‌
கொத்து பரோட்டா மாதிரி
எங்கு பார்த்தாலும்
தேசிய பாஷையின் ஒலிச்சிதறல்.
பிரதமர் வரும் வழி
ரத்தினக்கம்பளம் விரிக்கப்பட்டு
பல கி.மீ. களுக்கு
படுத்துக்கிடந்தது.
கட்டுக்கடங்காத கூட்டம்.
மாளிகை வாசலிலேயே
"மன் கி பாத்" நேரடி ஒலிபரப்பாம்.
காவி வெள்ளம்
டெல்லியை முக்கி முக்கி எடுத்தது.
கட்டிடங்கள் எல்லாம்
காவி வர்ணத்தில் அக்ரிலிக் எமல்ஷன்
பூசியது போல் புது பொலிவு.
ஏ ஏ பி யின் அந்த தொப்பி உருவத்தில்
சூரியன் தன் நிழலை
கட்டிடங்கள் வழியே துப்பியிருந்தான்.
தொப்பி கிழிந்து கந்தல் போல் ஒரு காட்சி.
டெல்லி நகரம்
இலங்கா தகனம் நடக்காத குறையாய்
அனுமன் சேனையால்
கவ்விப்பிடிக்கப்பட்டு கிடந்தது.
யே ப்ரதான் மந்த்ரி ஆயே..
மக்கள் நெருக்கியடித்து கூழாகினர்.
மீண்டும்
கோஷங்கள்
நீல ஆகாயத்தைக்குத்திக்கிழித்து
காவி ரத்தத்தை வழிய விட்டது.
விகாஸ் கா ப்ரதான் மந்த்ரி ஜிந்தா பாத்!
"வளர்ச்சியை வடிவமைத்த பிரதம மந்திரி
வாழ்க! வாழ்க!!"
தமிழில்
இதை யாரும் மொழி பெயர்க்கவில்லை.
அந்த சிந்துவெளியின்
அடி வயிற்று தமிழ் லாவா
இப்படி மொழி பெயர்த்திருக்கலாம்.
மாற்றான் தோட்டத்தின் இந்த‌
மல்லிகையை இப்படித்தானே வாழ்த்தும்.
கூட்டம் முண்டியடித்தது.
ஒரு முரட்டு மீசைக்காரர்
கூட்டத்தை பிளந்து கொண்டு
அந்த ரத்னக்கம்பள நடைபாதையை
பார்த்தார்!
அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
"ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!
கோ மாதா பாரத் மாதா
ஜிந்தாபாத்!
கோமாதா ஹமாரே  ப்ரதான் மந்திரி
ஜிந்தாபாத்!"
என்னது! ஆவலில் மக்கள்
பாய்ந்து பாய்ந்து பார்த்தார்கள்.
ஆம்!
பிரதம மந்திரி பதவி ஏற்க‌
"சர்வாலங்கார பூஷிதையாக"
கோ மாதா சென்று கொண்டிருந்தாள்."
அருகே
பதவிஏற்புக்கு உதவி செய்யும்
அதிகாரிகள்
கையில் ஃபைல்களுடன்
அணிவகுத்தனர்.
சற்று தள்ளி பின்னால்
மோடிஜி
அதே புன்னகையுடன்
பித்தான்கள் நீண்டவரிசையில்
கோட்டில் கீழ்நோக்கி அணிவகுக்க‌
ஏதோ ஒரு நாட்டு விஜயத்துக்கு
விமானம் ஏறும் களிப்புடனும்
கோமாதாவை கும்பிட்டபடி
நடந்து கொண்டிருந்தார்.
கோ மாதா
மூத்திரம் பெய்து
தவறு தவறு
கோமியம் வர்ஷித்து
கௌ டங்கும்
அதாம்பா சாணியும்..
போட்டுக்கொண்டே போனது!
மக்கள் நெரிசலுடன்
உள்ளே நுழைய தள்ளு முள்ளுவில்
ஈடுபட்டார்கள்!
அவரவர் கையில் பாட்டிலுடன்..
பாட்டிலா..எதற்கு?
கோமியத்துக்குத்தான்!

...................
...................

"அந்த ராஜஸ்தான் செய்தியைப்பற்றி
ஏன் அப்படி புலம்பினீர்கள்.
அதான் இப்போ
கோ மாதா அது இது என்று
உளறிக்கொண்டு
கெனா கண்டுகொண்டிருக்கிறீர்கள்.
போதும் தூங்கியது.
எழுந்திருங்கள்."
என் மனைவி என்னை உலுக்கினாள்

=================================================
(சும்மா நகைச்சுவைக்காக  ஒரு கற்பனை)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக