வெள்ளி, 12 மே, 2017

வெற்றி வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி வெற்றி
==============================================ருத்ரா

நான் சோம்பல் முறித்து
கை களை சொடக்கு போட்டுக்கொள்கிறேன்.
நெறைய வேலைகள் தலைக்கு மேலே !
அப்படி என்னப்பா என்று கேட்கிறீர்கள்.
இந்த வேலைகள் எல்லாம்
இடிஞ்சு போன வீட்டு உத்தரக்கட்டைகளைப்போல
என் மீது விழுந்து கிடக்கின்றன.
கட்டியிருக்கிற என் துணியை எல்லாம்
யாரோ டார் டார்னு கிழிச்சிருக்காங்க
வாய்க்குள்ள எல்லாம் ஒரே மண்ணு நறு நறுன்னு.
"உம் அப்புறம்..."
நல்லா .உம் கொட்டு .சினிமாக்கதை கேளு
குத்தாட்டம் போடு
ஏண்டா இப்படி இருக்கீங்க!

அவனவன் சோத்துக்கு
முதுகெலும்பை முறிச்சுணு  .இருக்கான்
அவன் "வேர்வையைப்புழிஞ்சா
நாலு இந்தியன் "ஓஷன்"தேறும்டா"
அட ஒட்டு போடறதுக்கு கூட
நாலாயிரம் ஐயாயிரம் கெடை க்குமான்னு
ஆச்சரியப்பட்டு கிடக்காங்கடா .

இங்க எங்க பாத்தாலும் பணம் தானடா
பிணம் குவிஞ்சாப்ல .
இவனுக்கு தான் விடியவே மாட்டேங்குதுடா.
இவன் பேசுற மொழியைக்கூட சுரண்டி  சுரண்டி
திங்கப்பாக்குது பூணூல் போட்ட
ஏதோ ஒரு மிருகக்கூட்டம்.
சாதி மதமுண்ணு சொல்லிக்கிட்டு
நம்ம சரித்திரத்தையே இங்க
கந்தல் கந்தலாய் ஆக்குதடா.
ஊழல் என்றொரு மௌன மிருகம்
கோரவாய் பிளந்ததால
காடு மலை ஆறெல்லாம் களவு போச்சுடா !
பாரு தலைக்கு மேல  வேலைடா
இதெல்லாம் சுத்தம்பண்ண
என்ன செய்யப்போறேனோ?
சிரங்கு வந்தவன் கை சொறிஞ்சாப்ல
இந்த "செல்ல"ப்புடிச்சு சொறிஞ்சுகிட்டிருக்கேன்
சொறிய சொறிய "பில்லு" கூடி புண்ணாச்சு .
புண்ணாகி புண்ணாகி ரத்தம் வழியட்டும்.
கடல் எல்லாம் இனி மக்கள் கடல் தான்!
"மெரீனா"கூட இனி மக்கள் கையில் தான்.

செல்லு  என்பது வெறும் மின்பொறி அல்ல
அதுல இனி
நம்ம சொல்லு எல்லாம் கூடணும்
சொல்லுக்குள்ள சொல்லுக்குள்ள
அணுக்களையும் பிளக்கணும் ....அதுல
ஏழு கடலும் அலை விரிச்சு ...
தீய  அறங்களையெலாம் பொசுக்கணும்.
வெற்றி வெற்றி வெற்றி
தமிழுக்கே இனி வெற்றி.

சோம்பல் முறிச்செதெல்லாம் போதும்டா
ஏமாத்து இதிகாச வில்லு முறிப்போம்டா
பம்மாத்துகும்பல்களின்  படையழிப்போம்டா!


==================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக