வெள்ளி, 19 மே, 2017

நகைச்சுவை (25)



நகைச்சுவை (25)
===============================================ருத்ரா

கவுண்டமணி

டேய் நான் உங்கிட்ட ரெண்டு ரூவா கொடுத்து என்ன சொன்னேன்.

செந்தில்

ரெட்ட எல வாங்கிட்டு வரச்சொன்னீங்க.

கவுண்டமணி

ஒரு எல இங்கே இருக்கு! இன்னொரு எலையை எங்கே!

செந்தில்

அதாண்ணே இது!

கவுண்டமணி

டேய் எங்கடா ஓடுரே! வாடா இங்க.

ஜூனியர் பாலய்யா

இருங்கண்ணே! நான் கேக்கிறேன்!

(அவருக்கே உரித்தான டி எஸ் பாலையா பாணியில்)

இதோ  பாருப்பா! அண்ணே உங்ககிட்ட ரெண்டு ரூவா கொடுத்து
என்ன வாங்கிட்டு வரச்சொன்னாரு?

செந்தில்

ரெட்ட எல‌

ஜூனியர் பாலையா

ஒரு எல இங்க இருக்கு....இன்னொரு எல எங்க இருக்கு.....

செந்தில்

அதான்யா இது.

ஜுனியர் பாலையா திகைத்து நிற்கிறார்.

கோவை சரளா அங்கே வருகிறார்.கொலுசுமணிகள் கொஞ்சும் குரலில்
சொல்லுகிறார்.

"ஆளாளுக்கு அவர வெரட்ரீங்க.இருங்க நான் கேக்கிறேன் "

செந்திலிடம் கேட்கிறார்

"இங்க பாருங்க.நான் கேக்கிறேன்.ஏங்கிட்ட பயப்படாம சொல்லுங்க!
ரெட்ட எல வாங்கியாரச்சொல்லி அண்ணன் உங்க கிட்ட எவ்வளவு கொடுத்தாரு?

செந்தில்

ரெண்டு ரூவா.

கோவை சரளா

சரி.அப்படீன்னா ஒரு எல குடுத்தீங்க.இன்னோரு எல  எங்க வச்சிருக்கீங்க!

செந்தில்

அதாம்மா இது...

கோவை சரளா

ஏனுங்க என்ன சொல்றீங்க.

"டேய்ய்ய்ய்ய்."

கவுண்டமணி பல்லை கடித்துக்கொண்டு செந்தில் மீது பாய்கிறார்.பிறகு அவர் மிகவும் சாந்தமாய் மெதுவாக கேட்கிறார்.

"அடேய்...கண்ணா!  நான் உங்கிட்ட எவ்வளவு குடுத்தேன்?

செந்தில்

ரெண்டு ரூவா குடுத்தீங்க.

கவுண்ட மணி

என்ன சொல்லி குடுத்தேன்?

செந்தில்

ரெட்ட எல வாங்கியாரச்சொல்லி.

கவுண்டமணி

நீயும் ரெட்டை எல வாங்கியாந்தே!

செந்தில்

ஆமாம்.


கவுண்டமணி

ஒரு எல எங்கிட்ட இருக்கு.இன்னொரு எல எங்கெ வச்சிருக்கே.

செந்தில்

அதாண்ணே..இது....(சொல்லிவிட்டு ஓடுகிறார்)

கவுண்டமணி

அடேய்ய் ......வாழைத்தண்டு தலையா...நில்லுடா! நில்லுடா!

(விரட்டிக்கொண்டே ஓடுகிறார்.)

செந்தில்

ஏங்கிட்ட கேக்காதீங்கண்ணே...."தேர்தல் ஆணையத்துக்கிட்ட" கேளுங்கண்ணே!

(சொல்லிக்கொண்டே ஓடி மறைகிறார்)

======================================================================
(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கற்பனை உரையாட இது. வேறு
எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறென்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக