சனி, 13 மே, 2017

நகைச்சுவை (22)


நகைச்சுவை (22)
=================================================ருத்ரா


செந்தில்

அண்ணே..அண்ணே  உங்ககிட்ட ஒரு ஐடியா சொல்லப்போறேன்..
கேக்குறீங்களா?

கவுண்டமணி

அடேய்..வயத்தக்கலக்குதுடா! இப்டித்தான் அப்போ அந்த சிங்கப்பூர்
"டால்பின் ஷோ"வுலே சொன்னே."வழு வழுன்னு நல்லா இருக்கிற‌
அந்த குட்டி டால்பினை "உப்புக்கண்டம்" போடலாமான்னு கேட்டே!

செந்தில்

அட! போங்கண்ணே !ஒங்களுக்கு எப்போதும் என்னயக்காண்டாலே
கேலி தான்.

(முகத்தை ஓரமாக வைத்து சிணுங்கிக்கொள்கிறார்)

கவுண்டமணி

சரி! சொல்லுடா!

செந்தில்

ஏண்ணே! மெரினா பக்கத்துல நம்ம "கோட்டைக்கட்டிடம்"எப்ப பார்த்தாலும் சும்மாத்தானே கெடக்குது.அதுல அம்பது அறுபது
நெல்லுமூட்டையை அவுத்து நெல்லக் காயப்போடலாம்ல.....

கவுண்டமணி

அடேய் படுவா! தீச்சட்டித்தலையா! இப்ப நீ செத்தடா.....

(கவுண்டமணி கோபமாக செந்தில் மீது கல் எறிய குறி பார்க்கிறார்.
செந்தில் சிட்டாக பறந்து மாயமாய் விடுகிறார்)

=================================================================
(கற்பனைக் காமெடிக்காட்சி இது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக