சனி, 20 மே, 2017

காஃபிக்கோப்பை ஆறுகிறது


காஃபிக்கோப்பை ஆறுகிறது
=================================ருத்ரா இ.பரமசிவன்

டேபிளில்
காஃபிக்கோப்பை ஆறுகிறது.
ஆம்.
காஃபிக்கு
ஆவி போய்க்கொண்டிருப்பதைப்பற்றி
அவனுக்கு கவலையில்லை.
அவன் படத்துடன்
கட்டத்துள் செய்தியுடன்
மூக்குக்கண்ணாடியையும்
பிதுங்கி வழிய
எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஸார் பேப்பர்"
வாசலில் குரல்.
சூரியன் கூட இன்னும்
படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.
பத்திரிகை பக்கங்கள் படபடக்கின்றன.
அவன் அவசரம் அவசரமாய்
பத்திரிகைப்பக்கங்களை தேடுகிறான்.
பத்திரிகையில் அவனை
"ஃபோட்டோவில்"பார்த்துவிட்டான்.
இது போதும்.
அவன் படுக்கையில் போய்
விறைத்துக்கொண்டான்.
சூரியன் ஒளியை துப்பிக்கொண்டு
எழுந்திருந்தான்.
அந்த வீட்டின்
அந்த படுக்கை அறையிலிருந்து
கூக்குரல்கள் ஓலங்கள்
வெளிக்கிளம்பின!
ஆவி எப்போதோ போய்விட்டது.
கண்ணீர் அஞ்சலியுடன்
அந்தப்படத்தில்
அருமையாய் விழுதிருந்தான்
ஒரு முற்றுப்புள்ளியாய்!

===============================================
27.09.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக