புதன், 24 மே, 2017

சோளக்காட்டு பொம்மை மனிதர்கள் (பாடல் ll

 சோளக்காட்டு பொம்மை மனிதர்கள் (பாடல் ll )
=======================================
(THE HOLLOW MEN  by T S ELIOT....Stanza II )

                              II

    Eyes I dare not meet in dreams
    In death's dream kingdom
    These do not appear:
    There, the eyes are
    Sunlight on a broken column
    There, is a tree swinging
    And voices are
    In the wind's singing
    More distant and more solemn
    Than a fading star.
 
    Let me be no nearer
    In death's dream kingdom
    Let me also wear
    Such deliberate disguises
    Rat's coat, crowskin, crossed staves
    In a field
    Behaving as the wind behaves
    No nearer-
 
    Not that final meeting
    In the twilight kingdom

-------------------------------------------------------------------------


உள்ளே
ஒன்றுமில்லாமல்
வெறுமையைக்கொண்டு
மிடையப்பட்ட மனிதர்கள்  நாம்!

கனவு காண்பது
அந்த கண்களா? இந்த கண்களா ?
உறக்கம் என்பது சாக்காடு எனில்
அந்த ராஜ்யத்தில்
கண்கள் எங்கே புதையுண்டு கிடக்கும்?
கண்களுக்கு அந்த சதை அழுகிய
காட்சிகளை காண இயலுவதே இல்லை.
புகைபோல் திரைக்காட்டும்
அக்காட்சியில் கண்களுக்கு வேலையில்லை.
உயிர் வெளிச்சம் எங்கோ
இடுக்குகளில் கசிவது
உடைந்த தூண் சிதிலங்களில்
அந்த நொறுங்கிய சூரியன்
விழுவது போல் தெரிகிறது.
மரங்கள் முறிந்து கிளைகளுடனேயே
ஊஞ்சல் ஆடுக்கின்றனவோ?
..இந்த குரல் பிசிறுகள் எல்லாம்
எங்கே தூவப்படுகின்றனவோ?
மத வழிபாட்டுக்கூடங்களின்
அந்த ரத்தினக்கம்பளங்களில்
இறைந்து கிடக்கின்றனவோ?
காற்றின் சங்கீதங்களாய்
தொலை தூரங்களின்
தொண்டைக்கமறல்களில்
மிகக்கனமாய்
உறுத்தலோடு கேட்கின்றன.
விண்வெளியில் காணாமல் போய்
இறந்து போகத்துடித்து
வழுக்கிக்கொண்டு ஓடும்
அந்த "சீக்கு"பிடித்த நட்சத்திரங்களைப்போல
அந்த ஒலி மினுக்குகிறது.

வேண்டாம் அந்த கனவின்
சாக்காட்டுக்கோட்டை!
கண்களால்
அதை நெருங்க
துளி கூட வலு இல்லை.

நானும் அந்த பொய் உடுப்புகளை
மேலே "பொத்திக்கொள்ளுகிறேன்"
இந்த சோளக்காட்டு உருவத்துக்கு
எலித்தோலும் காக்கைச்சிறகும் தானே
"சூட்டும் கோட்டும்"!
சிலுவைக்குறியிட்ட கம்புகளில்
மரண நிழலாய் தொங்குகிறேன்.
இந்த மொட்டை வெளியில்
காய்ச்சி ஊற்றப்பட்ட
அந்த பரமண்டலத்தையும் காணோம்!
அதற்குள் இன்னும்
கர்ப்பமே தரிக்காத அந்த
பிதாவையும் காணோம் !
காற்று அசைப்புக்கேற்றாற் போல்
இந்த பொம்மை ஆட்டங்கள்..!
இன்னும் நெருங்கவா?...
அய்யோ.. ..என்ன செய்வது?
ஆத்மா எனும் ஆவியும் இல்லாமல் ..
ரத்தசதையான உடலும் இல்லாமல் ..
இந்த ரெட்டை ராஜ்ஜியத்தில்
அந்தியின் சிவப்பு மத்தாப்பு
ஊனொளி உருக்கி உள்ளொளி பெருக்கி ...
சவப்பெட்டியின் கடைசி ஆணி
இன்னும் அறையப்படவில்லை.
கூட்டமும் வசனமும் இன்னும்
மூசசு விட்டுக்கொண்டிருக்கிறது
இறுதிமூச்சுக்கு முந்திய ஒரு இறுதி மூச்சில்
முடிச்சு இறுக்கிக்கொண்டே  வருகிறது..
மேற்கில்
சூரியன் கழுத்தில்
இறுகுகிறது கயிறு.
...ஆனால்
உயிர் தளிர்க்கிறதே....

=====================================================
மொழி பெயர்ப்பு (அல்லது மறு வார்ப்பு) :
ருத்ரா இ பரமசிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக