செவ்வாய், 30 மே, 2017

மாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்


  • மாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்
  • ===============================================ருத்ரா

  • உயிர்களை
  • கொல்லாமை பற்றி
  • நம் தமிழ்ப்பாடல்கள்
  • கசிந்து கசிந்து உருகி
  • கண்ணீர் விட்டிருக்கின்றன.
  • வள்ளலாரின் வெள்ளையுடை
  • அந்தக் கருத்தின் தூய்மையான‌
  • அடையாளம்.
  • கொல்லாமை பரிணாமத்தின் உச்சி.
  • ஆனால் அப்போது
  • மனிதர்கள் இறைச்சி உண்டு
  • படை ஆட்சி செய்யும்
  • முறைகள் மாறிப்போகும்.
  • உலகம் எங்கும்
  • ஒருவரை ஒருவர் அடித்து வாழ‌
  • விரும்ப மாட்டார்கள்.
  • தேசங்களின்
  • எல்லைகள் கழன்றுவிடும்.
  • தேசங்களின் கொடிகள்
  • தங்கள் தங்கள் தேசத்தை
  • காக்கும் முரட்டுத்தனமான‌
  • தேச பக்தியை வீசியெறிந்து
  • வெறும் வெள்ளைக்கொடிகள்
  • ஆகி விடும்.
  • உலகப்பொது அமைதி அன்பு
  • தழைத்தோங்கும்.
  • ஆனால்
  • மாடுகளும் ஆடுகளும் பன்றிகளும்
  • பெருகி
  • நம் ஆட்சி நாற்காலியை
  • பிடித்தாலும்பிடிக்கலாம்.
  • எனவே கொல்லாமையை
  • கொடியாய் உயர்த்திய‌
  • புத்தமும் சமணமும்
  • எங்கோ காணாமல் போய் விடலாம்.
  • ஆனாலும்
  • இப்போது புத்தம் ஆளும் தேசங்களில்
  • கசாப்பு கத்திகள்
  • வெட்டிக்கொண்டு தான் இருக்கின்றன.
  • தூய்மையான கொல்லாமை அறத்தை
  • எப்படி கைக்கொள்வது?
  • புற்று நோய் மற்றும் கொடிய‌
  • எய்ட்ஸ் நோய்களை
  • கொல்லுவதற்கு அந்த
  • வைரஸ் எனும் நுண்ணுயிரியை
  • கொன்று தானே ஆகவேண்டும்.
  • அப்போது தான் மனிதன்
  • பகுத்தறிவுவாதி ஆகிவிடுகிறான்.
  • இயற்கை எனும் வல்லறம்
  • உயிர்களைக் கொன்று
  • மேலும் வலுவான உயிர்களை
  • உண்டாக்குகிறது.
  • மேலும் மேலும் வலுவான உயிர்கள்
  • நிலைத்து நின்று
  • பரிணாம ஆற்றலை முன் எடுத்துச்செல்கிறது.
  • மனிதன் வளர்ச்சியை நோக்கி செல்லுவதும் இயலும்
  • என்கிறான் பகுத்தறிவு வாதி.
  • தெய்வ சிந்தனை உள்ளவனோ
  • இறைவன்
  • ஆடு மாடு போன்றவைகளை
  • மனிதன் தின்பதற்கே
  • படைக்கிறான் என்கிறான்.
  • எல்லா உயிர்களும் சுதந்திரமாய்
  • இயல்பாய் "கசாப்பு" செய்யப்பட‌
  • வேண்டாத ஒரு
  • "மாதிரி வடிவ பிரபஞ்சத்தையும்"
  • மனிதனின் விஞ்ஞானமே
  • கண்டுபிடிக்க வேண்டும்.
  • இது இயலுமா?
  • ஆனால்
  • காவிக்காரர்களின்
  • மாட்டு இறைச்சி அரசியலில்
  • ஒரு குள்ளநரித்தந்திரமும்
  • ஒரு கள்ள சாணக்கியமுமே
  • இருக்கிறது.
  • காவி கார்ப்பரேட் பொருளாதாரத்தில்
  • மாய்மாலமாய்
  • வேத இரைச்சல்களோடு
  • கீழ்க்குடி பிறப்பு மக்களை
  • மேற்குடிப் பிறப்பு  மக்களின்
  • வேள்வித்தீயில் ஆகுதியாக்கி
  • அழித்தொழிக்க வேண்டும்
  • என்ற அரசியல் மட்டுமே இருக்கிறது.
  • மாட்டு இறைச்சியில்
  • மாடுகள் சாவதை விட‌
  • மானிடமே அதிகம் படுகொலை செய்யப்படுகிறது.
  • எளிய மக்களே.. அவர்கள் வியாபாரங்களே..
  • உண்மையில்
  • பொருளாதாரச்சுரண்டலில்
  • இறைச்சித்துண்டுகளாய்
  • ஒரு அரூப சர்வாதிகாரத்தின்
  • கோரப்பற்களில் தின்னப்படுகின்றன.

  • ==================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக