வெள்ளி, 9 டிசம்பர், 2016

அம்மாவுக்கு ஒரு இரங்கல்




அம்மாவுக்கு ஒரு இரங்கல்
====================================ருத்ரா இ.பரமசிவன்.

அம்மா உன் படுக்கையை
அப்பல்லோவுக்கு நீ
நீ மாற்றிக்கொண்டபோது
நாங்கள் நினைத்தோம்
 உனக்கு கொட நாடு
போரடித்துப்போனது என்று.
எமனோடு போரிடவா
அங்கு  சென்றாய்.?
இங்குள்ள எதிர்கட்சிகள்
போதாது  என்று அங்கு சென்றாயோ.
பார் உன் குழந்தைகளை.
தான் உண்ணும் இட்லியில்
தன் இதயம் தேடி
இன்னும்
அழுதுகொண்டே இருக்கின்றன.
வந்து ஊட்டுவாயா அம்மா
இந்த குழந்தைகளுக்கு.

========================================











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக