செவ்வாய், 20 டிசம்பர், 2016

காதல் ஹாலுசினேஷனில் கரைந்த கவிதை


காதல் ஹாலுசினேஷனில் கரைந்த கவிதை.
---------------------------------------------------------------------


எங்கே நான்?
========================================ருத்ரா.

அவள் என்ன சொல்கிறாள் என்பதில் என் மனம் தோயவில்லை.
அவள் முகக்கடலில் ஆழங்காணாத ஒரு ஆழத்தில் விழுந்து கிடந்தேன்.
அவள் கண்களை "ஸ்கூபா டைவிங்க்" கருவியாக்கி அந்த ஆழத்துள் சென்றேன்.
வண்ண வண்ண வகை வகையான பவளக்கூழ் பூச்சிகளோடு நான்
உரசி உரசி உரையாடினேன்.
திடீரென்று ஒரு சுழிக்குள் புகுந்தேன்....
தங்க ஜரிகைகளில் வைர மினுமினுப்புகளில் அங்கே
ஒரு பிரளயம் என்னை
கவ்வி கவ்வி சுவைத்தது போன்ற உணர்வு!
எனக்கும் கூட ஒரு முப்பரிமாண கனவின் திடரூபமான‌
இனிப்பு சுவையூட்டி அலைக்கழித்தது.
ஏன் இந்த ஆழப்புயல்?
ஒன்றுமில்லை.
அவள்
"க்ளுக்" என்று சிரித்திருக்கிறாள்.
அது தான் என் இதய ஆரிக்கிள் வெண்டிரிக்கிள் அறைகளில் எல்லாம்
அவள் இதயத்தை
கோடிக்கணக்காய் அச்சடித்து
அந்த கடல் பிழம்புக்குள்
என்னைக் கரைத்தது.
குடித்தது.
என்னை....என்னை நான் காணவில்லை.
எங்கே நான்?
எங்கே அவள்?
அந்தக்கடல் அமைதியாகி
உள் வாங்கிக்கொண்டது.
கரையில்
கிளிஞ்சல்களும் "கெல்ப்" பாசிச்சுருள்களும்
ஒதுங்கி கிடக்கின்றன!

=====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக