சனி, 24 டிசம்பர், 2016

குரங்கு பொம்மை-

குரங்கு பொம்மை-
============================ருத்ரா.இ.பரமசிவன்

இப்படியொரு படம்!
விஜயசேதுபதி "போஸ்டர்" வெளியிட்டிருக்கிறார்.
தலைப்பே
கருத்து பொதிந்ததாயிருக்கிறது.
வழக்கமான நல்லவன் கெட்டவன் நட்பு..
அவர்களிடையே உள்ள
உரசல்களும்
தழுவல்களுமே
படத்தின் கருவாய் இருக்கலாம்.
டார்வின் பரிணாம தத்துவத்திற்கு
எப்போதுமே
"குரங்கு" தான் கார்டூன்.
குரங்கு விஞ்ஞான அறிவில்
மனிதனையும் மிஞ்சி
உலகத்தின் மீது
அவை புது வித ஏலியன்களாய்
பாய்ந்து பிராண்டுவதாய்
ஹாலிவுட் காரர்கள் அசத்துகிறார்கள்.
இங்கே
இந்த குரங்கு படத்தில்
ஒரு மூளைவிளையாட்டை
கார்ட்டுன் ஆக்கியிருக்கிறார்கள்.
பாரதிராஜாவுக்கு அப்பா வேடமாம்!
"கல்லுக்குள் ஈரத்தில்"
அவருக்குள் கசிந்த ஒரு காதல் கதையை
அற்புதமாய் காட்டியவர்.
படத்தலைப்புக்குள்
ஒரு கவிதையே
கூடு கட்டியிருப்பது போல் இருக்கிறது.
நாம் நம் இதிஹாசங்களில்
குரங்கு வழியாய்
காஸ்மாலஜியின்
சூத்திரங்களை சுருட்டிவைத்திருக்கிறோம்.
திராவிடத்தொல் தமிழ் ராமனுக்கும் முன்பே
அனுமான் வாயில் ஒலித்திருக்கலாம்
என்று
தமிழிஸ வாதிகள் கற்பனை செய்கிறார்கள்.
வால்மீகியே குறிப்பிடுகிறாராம்
வேதங்களையெல்லாம் ஒப்பிக்கும்
அனுமான்
வேறு ஒரு மொழியும் "பேசுகிறான்" என்று.
இந்த குரங்குப்பொம்மையில்
அந்த சீரியஸ் கூளங்களையெல்லாம்
அடைத்திருக்க மாட்டார்கள்.
சமூக நையாண்டிக்குத்தான்
இந்த பொம்மை போலும்.
அதர்மத்தை மூன்றுவிதமாய்
அடைக்கும்
மூன்று குரங்கு பொம்மைகளை
நம் மேஜைகளில்
நாம் இன்னும் கொலுவைத்திருக்கிறோம்.
ஆனால்
இது ஏதோ கம்ப்யூட்டர் அல்காரிதத்தை
தன் கபால நரம்புகளாய்
குறுக்கும் நெடுக்கும் பின்னல் செய்து
வித்தை காட்டுகிறது.
படம் நம் ஆவலை மிகவும் தூண்டுகிறது.
நம் மனம் குரங்கு!
குரங்கின் மனம்?
அது ஒரு அபூர்வ திரைக்கதை!
பார்க்கலாம்!

==================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக