திங்கள், 12 டிசம்பர், 2016

சூபர்ஸ்டார் அவர்களுக்கு ...

சூபர்ஸ்டார் அவர்களுக்கு ...
========================================ருத்ரா இ பரமசிவன்.

சூபர்ஸ்டார் அவர்களுக்கு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லோரும்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இந்த சூபர் ஸ்டார் பட்டம்
உங்கள் சூபரான நடிப்புக்கு என்று.
நான் நினைக்கும் சூபர்ஸ்டாராக‌
நீங்கள் வலம் வருவதற்கு
காரணம் வேறு.
நீக்கள் எங்கள் கண்பார்வையில்
நடிக்கவே இல்லை.
படு இயல்பாய் யதார்த்தமாய்
எங்களுக்கு காட்சி தருகிறீர்கள்.
உங்கள் தலையை மறைக்க‌
தொப்பி தேடியதில்லை.
அதனால் தான் அது
கருப்பாய் பளபளப்பாய் இருந்தாலும்
இமயத்தின் கம்பீரம் அதில் இருக்கிறது.
சினிமாவில்
ஸ்டைலாய் கருப்புக்கண்ணாடி
மாட்டி கழட்டி யெல்லாம்
போஸ் கொடுத்திருக்கிறீர்கள்
ஆனால்
எங்கள் கண்களை மேடையில்
நேராகவே உங்கள் கண்கள் கொண்டு
தரிசிக்கிறீர்கள்..
அதனாலேயே
எங்கள் இதயங்கள் உங்கள்
இதயத்தால் நிரம்பி வழிகிறது.
மேலும்
நடித்து ச்ம்பாதித்தாலும்
அது நடிப்பு இல்லை என்று காட்டியிருக்கிறீர்கள்.
உங்கள் படத்தயாரிப்பாளரின் நஷ்டத்தை
ஈடு கட்ட நீங்கள் முன்வந்தது
நடிப்பு இல்லை.
திரை உலகப்பொருளாதாரத்தின்
பாறங்கல் நசுங்கல் இடையேயும்
உங்கள் ஈரம் கசிந்த இதயம் அது.
நீங்கள் பிறப்பால் தமிழன் இல்லை.
இருப்பால்...
எங்களுடன் இருப்பால் .....
நீங்களும் தமிழன் தான்.
நாங்கள் திராவிடர்களை மட்டும் அல்ல‌
இந்தியர்கள் எல்லோரையும்
தமிழன் வழி வந்தவர்களாய்த்தான்
ஒரு வித ஆராய்ச்சிக்கண் கொண்டு நோக்குகிறோம்.
ஆம்.
இந்தியன் ஒரு சிந்துவெளித்தமிழன்.
அதனால் தான்
இன்னும் கூட எனக்கு நீங்கள்
சூப்பர் சூப்பர் ஸ்டார.
இந்த வெள்ளைமனப் பிள்ளைத்தமிழர்கள்
உங்கள் எந்த "இமேஜும்" வேண்டாம்
இந்தாருங்கள் பிடியுங்கள் செங்கோலை
என்று
எத்தனையோ தடவை கூறியபோதும்
அந்த "நாற்காலியை"உதறிவிட்டு
எங்கள் மனங்களின்
எங்கோ ஒரு உயரத்தில் போய்
உட்கார்ந்து இருக்கிறீர்கள்.
அதனால் தான் நீங்கள்
சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்.
வாழ்க! வாழ்க! நீங்கள்
நீடூழி வாழியவே!

===================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக