சனி, 7 ஜூன், 2025

இருபது கவிதைகள்

 இருபது கவிதைகள்

____________________________________


இந்த எழுத்துக்கள் 

இன்னும் விழித்துக்கொண்டிருக்கின்றன.

இவற்றின் காகித உடல்களையும் 

மீறிய 

கனவுப்பிரளயங்கள்

இன்னும் இன்னும் இங்கு

கரு தரித்துக்கொண்டிருக்கின்றன.

மரணங்களின் மிதிபாடுகளில்

இந்த மின்னல் ரோஜாக்கள்

கூழானதில்லை.

வாழ்க்கையின் சாறு

எங்கோ ஒரு அக்கினியாற்றின்

அடி வயிற்று எரி குழம்பாய்

பீறிட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.

சர்வாதிகாரம் சவைத்துத்துப்பிய‌

வரலாற்று மிச்சங்களிலிருந்தும்

புதுத்தளிர்கள் தலை நீட்டிக்கொண்டு தான் 

இருக்கின்றன.

பேனாக்கூடுகளில்

பொறிக்கக்காத்திரும்

டொரனாடோ குஞ்சுகள்

எல்லாவற்றையும்..

ஆம் இந்த 

தனி மனிதக்கொடூரங்களையெல்லாம்

துவம்சம் செய்யக்காத்திருக்கின்றன.

அவை

சமுதாய இதயத்தை 

கசக்கிக்கொண்டே இருக்கும் 

கயமைகள் நீங்கும் வரை....

அவை

தன் கூர்விழிகளைத்

தீட்டிக்கொண்டே இருக்கும்.


_______________________________________________

சொற்கீரன்.


20 Famous Poems Everyone Needs to Read at Least Once

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக