வெள்ளி, 20 ஜூன், 2025

ஒரு குடம் தண்ணி ஊத்தி...

 ஒரு குடம் தண்ணி ஊத்தி

ஒரு பூ பூத்தது.

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்தது.
சிறுமி பாடி கொண்டே தான்
போனாள்...
சிறுமி கம்பியூட்டர் விஞ்ஞானத்தில்
பெரிய பட்டங்கள் எல்லாம்
வாங்கி...
இப்போது ஏ ஐ கம்பெனிக்கு
சி இ ஓ ஆகி விட்டாள்.
இப்பொதும்
அதே தண்ணிர்க் குடம்
பூ பூத்தது
விளையாட்டு தான்.
எத்தனை குடம் தான்
எண்ணுவது?
எத்தனை பூவைத் தான்
எண்ணிக்கொண்டிருப்பது?
அந்த "இன்ஃபினிடி" யின்
மூக்கை உடைத்துப்பார்த்து விட்டுத்தான்
மறு வேலை என்று
சோறு தண்ணியெல்லாம் இல்லாமல்
"அல்காரிதம்" தூண்டில் எழுதி எழுதி வீசி
வெகு தூரம் போய்விட்டாள்.
பில்லியன் பில்லியன்...பில்லியன்
ஒளியாண்டுகள்!
மனிதம் எனும் உந்து விசை அறிவின் கதிர் வீச்சு! அதற்கு ஏன் இன்னும் "ஆண் பெண்" படப்பொம்மைகள்?
____________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக