மனித விளிம்புகள் தேடி...
_____________________________________
மனிதன் தன் விளிம்புகளைத்
தேடிய பயணம் இது.
ஒன்று சேருங்க்ள்.
நீங்கள் இழப்பது உங்கள்
அடிமைச்சங்கிலிகளைத் தவிர
வேறு ஒன்றுமில்லை
என்று
கிளம்பிய முழக்கங்களின்
தன் மிச்ச சொச்சங்களையும்
அவசரமாக அள்ளிப்போட்டுக்கொண்டு
இந்த மனித்ன்
எந்த உச்சிக்கு ஓடிக்கொண்டு இருக்கிறான்?
தன் மூளையின் சிகரங்களுக்கும்
உச்சிமேல் உச்சி தேடி
ஓடிக்கொண்டிருக்கிறான்.
இதோ அதன் தொப்பூள் கொடியைப்
பிடித்து
ஊஞ்சல் ஆடலாம்
என்று
இந்த பிரபஞ்சத்தின்
"அகர முதல" தேடி
ஓடிக்கொண்டிருக்கிறான்.
மனிதா!
கொஞ்சம் நில்!
மனிதம் "மனிதம்"மீது
அன்பு கொண்டு
ஆளும் செங்கோலை
எங்கோ தொலைத்து விட்டாயே?
உன் பயணம் இலக்கினைத்
தொட்டுவிடுமா?
மதம் எனும் வெறி
மனிதப்பூண்டையே
அற்று விடச்செய்யும்
போர் மேகங்களை உன் மீது
கவித்துக்கொண்டே இருக்கின்றனவே.
சுய லாப முடுக்குவிசை
எனும் "குதிரை விசை"
உன் பாதையை எங்கோ
இடறச்செய்து கொண்டிருக்கின்றனவே.
அதற்கு
ஓரு "அல்காரிதம்"அமைத்துக்கொண்டு
பயணத்தை தொடர்!
மனிதா
நீ விழித்துக்கொண்டே தான்
ஓடவேண்டும்!
ஆம்!
ஓடுவதை மட்டும்
நிறுத்தி விடாதே!
____________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக