திங்கள், 2 ஜூன், 2025

குகைவழி

 


குகைவழி

______________________________________


மனிதனே!

உன் பாதை இடறியதில்

ஒரு "பாதை இழந்த பாதையை"

நோக்கி

நீ பயணப்பட்டு விட்டாய்.

உன் மூளை

மிக மிக உயரமான‌

ஒரு உச்சிக்குப் போய்விட்டதில்

நீயே

ஒரு செயற்கை மூளைக்குள்

நுழைந்து கொண்டு விட்டாய்.

ஆமாம்.

ஐயமே இல்லை.

உன் கணித விஞ்ஞானத்தின்

வேகம்

எல்லா வேகங்களையும் 

விழுங்கிக்கொண்டு விட்ட‌

வேகத்தை 

எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறது.

எத்தனை காலத்துக்குத்தான்

"பில்லியன் ஒளியாண்டுகள்" என்று

தொலைநோக்கி மூலம்

விழி துறுத்திப்

பார்த்ததை எல்லாம்

சொல்லிக்கொண்டிருப்பாய்.

செயற்கையான ஒரு மூளையை

நீ

கையில் வைத்திருக்கிறாய்

என்பதை

எப்படிச்சொல்வது?

பங்கு மூலதனப்பகடைக்காய்கள்

அதை

கைப்பற்றிக்கொண்டு விட்டன.

டி என் ஏ..ஆர் என் ஏ எனும்

நுட்பத்திலும் நுட்பமான‌

சங்கிலிப்பின்னலை வைத்து

மூளையின் மூலை முடுக்கெல்லாம்

நுழைந்து

அதைக்கண்டு பிடித்து விட்டன.

இத்தனைக்

கோடி கோடி மக்கள் குவியல்கள்

தேவையில்லை.

ஏதாவது ஒரு மூளையின் 

மின்னணு இயக்கவியலில்

குவாண்டத்தின் என்டாங்கிளைப் புகுத்தி

இந்த 

கோடி கோடி நுட்ப‌

பின்னல் இயக்கங்களை

ஒரு கைபிடிக்குள் 

கொண்டு வந்து விடலாம் 

என்ற சூத்திரத்தை

தன் மூளைக்குள் வைத்திருக்கின்றன.

அது மூளை அல்ல.

பலப்பல கோடி மக்களின்

"சிந்தனை வலைப் பின்னல்களின்"

....மைக்ரோ ப்யோ சிப்புகளின்

கிட்டங்கி அது.

இனி ஒரு நீண்ட‌

"புழுத்துளை வழி"எனும்

"வோர்ம் ஹோல்" தான்

நம் "மொத்த இருப்பியலியம்" ஆகும்.

(டோட்டல் எக்ஸிஸ்டென்ஷியலிசம்)

ஏ ஐ யில்

பில்லியன் பில்லியன் பில்லியன்களாய்

க்ரிப்டோ பங்குகள்

எனும்

ஒரு மாய "இல்யூமினாடி"களின்

விரலசைப்பில்

விஞ்ஞானிகள் கூட‌

விலங்கு பூட்டப்படுவார்கள்.

இந்த நீண்ட நெடிய‌

இருட்டின் குகைவழியில் தான்

ஓ! மனிதா!

உன் மத்தாப்பு பிரகாசங்கள்

அல்காரிதம் செய்யப்படும்.

அட! என்னய்யா இது.

வீண் கற்பனை.

கற்பனை என்றாலும் 

கற்சிலை என்றாலும் 

என்று 

கண்மூடி  உறைந்து 

கிடப்பது தான் 

நமக்குப்பழக் கமாயிற்றே .

இப்போதைக்கு

அந்த "சக்தி வாய்ந்த"

"கேமஸ்' விளையாட்டுகளின் 

குவாண்டக்காடுகளில்

குகை வைத்துக்கொள்ளுங்கள்.

"டெக்"நாயகம் எனும்

மாய "ஜன நாயகத்து"

சந்து பொ ந்துகளில் 

அடைந்து கொள்ளுங்கள்.

சுகமான பயணம் தான்.

அந்த  

"இன்னொரு வழி எனும் திறப்பே"

இல்லாத‌

குகை வழிப்பயணம் இது.

ஓ! மனிதா!

விழித்திரு!

ஒன்று சேர்.

ஒவ்வொரு மனிதனும்

ஒரு சுடரேந்தியாய்

பரிணாமம் கொள்ளுவதே

தீர்வு.

அதை சிந்தி!


______________________________________________________

சொற்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக