விண்ணுக்குள்ளே ஒரு விண்ணின் கண்கள்
______________________________________________
இந்த ஆகாயத்தை
தோலுரித்துக்கொண்டே
போவோமானால்
எங்கே போய்
நாம் முட்டிக்கொள்வது?
ஏ ஐ நம்மை
எங்கெல்லாமோ
இழுத்துக்கொண்டு ஓடுகிறது.
ஒன்று
சொன்னது
"முடிவு" என்பதற்கு
முடிவும் இல்லை முதலும் இல்லை
என்றது.
பெருவெடிப்புக்கும்
கருந்துளைக்கும்
இடையே எத்தனையோ பின்னல்களை
சடை பின்னி
ஒளியாண்டுகளை
பில்லியன் கணக்கில்
சவைத்து சவைத்துத் துப்பி
சரித்திரத்தை
டிஜிடல் துண்டுகளாக்கி விட்டது.
சாஸ்திரங்களை
"ப்ரைம் நம்பர்களின்"
நீண்ட நீண்ட பாம்புகள் ஆக்கி
நெளிய விட்டு
ஓடிப்பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கிறது.
உலகத்தின்
இருண்ட முனைகளின்
விழிக்குகைகளில் கூட
வெளிச்சக்கீற்றுகளை
பிடித்து இழுத்துக்கொண்டு
வெளியே போட்டது.
அண்டங்களை
அங்குலம் அங்குலமாக
அளந்து சொன்னது.
நமக்குத்தெரிந்தது
பிண்டம் பிடித்து வைத்து
அந்த காக்கைகளோடு
பேசிக்கொண்டிருப்பது தான்.
மாய மந்திரங்களே
நம் உடலையும் குடலையும்
மூளைப்பிழியல்களையும்
மூண்டு மூண்டு எரிய
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பது.
"அபோக்கேலிப்ஸ்"எனும் அந்த
விளிம்பின் முனையில் கூட
"ஏன்"களின்
"எப்படி"களின்
துளிப்புகள் தான்!
அந்த ஃபூரியல் ட்ரான்ஸ்ஃபார்ம்களுக்குள்ளும்
நுழைந்து பார்த்து
க்யூபிட்டுகளின்
சன்னல்களை திறந்து முடி
மூடித் திறந்து
"கேம் சேஞ்சிங்" எனும்
கேம்ஸ் விளையாடிக்கொண்டிருப்பது
மட்டுமே
நம் விளையாட்டு.
மனிதனின் மூளைத்தினவுகளுக்குள்
விநாடிக்கு
சில "குயின்டில்லியன்" அதிர்வுகளின்
படப்பிடிப்புக் கேமராக்களே
நம் "டாய் லேண்டின்" ஹாலிவுட்டுகள்!
_____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக