செவ்வாய், 13 டிசம்பர், 2022

கூட்டிக்கழித்துப்பார் உன்னை.

 கூட்டிக்கழித்துப்பார் உன்னை.

___________________________________


நான் ஒன்றுமே இல்லை 

என்ற கண்டுப்பிடிப்புக்கு

"கூட்டிக்கழித்துப்பார் உன்னை"

என்ற விஞ்ஞானமே 

ஒரு கருவி.

படிக்கின்றவை எல்லாம்

ஆவியான பிறகு

என்ன மிச்சம் என்று

மூளைப்பாத்திரங்களை

கடா முடா என்று

உருட்டிப்பார்த்ததில்

ஏதோ கனவு அல்லது

ஒரு கெட்டி தட்டிப்போன 

ஆசையே மிச்சம்.

உன்னை வகுத்து மிச்சமே விழாத‌

ஒரு எண்ணாக நீ இருப்பாயானால்

நீ தான் "ப்ரைம் நம்பர்".

நீ வைத்திருக்கும் செல்வங்கள்

இந்த சமுதாயத்துக்கு

முழுதுமாய் பயன் பட்டு விடவெண்டும்.

"பயன் மரம் உள்ளூர் பழுத்தற்றால்"

என்று ஒரு சமுதாய மனிதன்

"அச்சாணி"யாகி

இருப்பதே அந்த "முதன்மை எண்"

பெற்றவன் என்று

வள்ளுவரின் ஃபெர்மேட் தியரம் 

சொல்கிறது.

சமுதாயத்தை மிச்சமே வைக்காமல்

சுரண்டி வைத்துக்கொள்ளுபவர்கள் 

இடையே

அந்த மனித குல மாணிக்கங்களை

எங்கே என்று தேடுவது?

வள்ளுவனின் நுண்ணோக்கியில்

இந்த வைரஸ்களை தனிப்படுத்தி

நாம் சமுதாய மருத்துவம் செய்யத்தான்

வேன்டும்.

நோய் நாடி நோய் முதல் நாடி...

அன்றாடம் தெரியும் இந்த‌

குறள் வெளிச்சமே நம்

நம் தமிழ் வெளிச்சம்.


___________________________________________________________

ருத்ரா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக