வியாழன், 22 டிசம்பர், 2022

அகழ்நானூறு 4

 அகழ்நானூறு  4

________________________________‍

சொற்கீரன்


வரைமுதற் சிதறிய மண்ணா முத்தம்

ஆலி இழைய  பளிங்கு நீராட்டி

கழை ஆடு அடுக்கத்து மஞ்சுபடு கடாஅம்

வௌவ்வும் கொலைநர் படர் அகல் எஃகம்

குழாஅத்த அடர்சுரம் அளைஇ ஆறு தடவி

அறஞ்செய் பொருளுக்கு ஆவி பொருட்டன்று என‌

ஆன்றவன் துப்பின் துணைசேரச் சென்றான்.

பானாட் கங்குல் ஞெகிழியிற் கொடிவிடு 

மின்னல் போழ்ந்த நெடுவான் பொறாது

பூமயிர் இறைவளை நெகிழ நோன்றாள்.

உளைமா கலித்த பரியொலி கேட்டனள் 

ஊர்ந்து தரை தொடுமுன் அவள் எல்வளை 

ஏறல் உற்றதாய் களியின் வீங்கு 

எறி கடல் ஆர்த்து இன் நகை பூத்தாள்.

--------------------------------------------------------------------------------------


அகம் 108-ல்    தங்கால் பொற்கொல்லனார் எழுதிய பாட்டின் சொற்களில் ஆழ்ந்த போது அதில் அகழ்ந்த சில சொற்களை வைத்து  நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை இது.

----------------------------------------------------------------------------------------------

சொற்கீரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக