செவ்வாய், 6 டிசம்பர், 2022

உங்கள் முன் ஒரு காமிரா

 புற்று நோய் 

மனிதனின் முற்றுப்புள்ளியை

நீட்டித்தரும் வலிக்கொடுமையின் 

நாவலாக இருக்கலாம்.

இல்லை

எழுத என்ன இருக்கிறது என்று

அந்த எழுத்துப்பறவை 

சடக்கென்று எச்சமிட்டு விடலாம்.

சூரியனின் அந்தியும் உதயமும்

முகமூடிகளை மாற்றி மாற்றிக்

காட்டிக்கொண்டிருக்கலாம்.

மனிதன் நோயாளியாக இருக்கும்போது

மட்டுமே 

இலேசான மனத்திற்கும்

இத்தனை  கனமா

என்று எடைபோடுகிறான்.

எப்படியும் சக மனிதர்களின்

நேயமான சொற்பூங்காக்களில்

நயமான நிழற்கவரிகளால் அவன்

வெம்மையை ஒதுக்கி

புன்முறுவல்கள் பூக்கட்டும்.

காலத்தின் நேனோ இடுக்குகளிலும்

மகிழ்ச்சி பிரளயங்களின்

ஆரஞ்சுப்பழத்து தோல் உரித்து

சுவைத்து ரசிக்கட்டும்.

வாழ்ந்து முடிக்கும் விளிம்புகள்

எங்கேயோ இருந்து விட்டுப்போகட்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே தான்.

உங்கள் முன் ஒரு காமிரா 

கேட்கும் மென்குரல் ஒலிக்கிறதா?

"சீஸ்" சொல்லுங்கள்.


______________________________________________

ருத்ரா



(திரு வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களன் உருக்கமான ஒரு பதிவுக்கு "கருத்து தெரிவி"என்ற வறட்டுக்கட்டத்தில்

என் நெஞ்சத்தைக் கிள்ளிய அந்த வரிகளுக்கு இழைய முடியாமல் இழைந்த வரிகள் இவை)

07.12.2022/ 00_12.அதி காலை.

_____________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக