ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ஒரு சுடரேந்தியின் சொல்லேந்தி!

 ஒரு சுடரேந்தியின் சொல்லேந்தி!

_________________________________________________‍



வண்டி வண்டியாக தத்துவங்களை

சுமந்து கொண்டிருக்கும்

இந்து மதத்தின் முதுகு வளைந்தே போனது.

மூவர் வந்தனர்

மூண்டு கிடந்த இருட் சிப்பத்தை

பிரித்து வெளிச்சம் பெறுங்கள் என்று.

மனிதனும் கடவுளும் ஒன்றே 

என்றார் சங்கரர்.

ஒன்றே என்பதையும் 

வேறுபாடுகளை களைந்து

சென்று உணரவேண்டும் என்றார்

ராமானுஜர்.

ஒன்றா?

இல்லவே இல்லை 

கடவுளை மனிதன் தொட்டுக்கூட‌

பார்க்க முடியாது.

உள்ளத்தால் உருகிக்கொண்டே

இருக்க வேண்டியது தான் என்றார்

மத்துவர்.

இவை சிந்தித்துப்பார்த்து

உணர்ந்து உணர்ந்து

உருகத்தக்கவை தான்.

இவற்றுள் வர்ணம் காட்டும்

நச்சுப்பாம்புகளின் முட்டைகள்

ஏன்?

அவை படம் விரித்து நஞ்சு பொழிந்து

கீழ்மனிதர்கள் எனும்

இந்த மனிதர்களின்

வாழ்க்கைப்படலங்களை

அழித்தொழிப்பது ஏன்?

இதற்குத்தான 

இறை சிந்தனையில்

ஒரு சமத்துவம் வேண்டும்

என்று சான்றோர்கள் எண்ணினினர்.

ராமானுஜர் 

அதன் பெருவெளிச்சம் ஆவார்.

முதலில் அதை

"அறிய விடு"

அப்புறம் தானே அது

கருப்பா?சிவப்பா? என்று தெரியும்.

இந்த இருட்டை துடைப்பது தானே.

"தமஸோ மாம் ஜோதிர்கமய'

இந்த முக்தியே இவர்களுக்கு

கிடையாது என்பது

இறைவனுக்கே கருப்பு முக மூடி போட்டு

தூக்குமேடையில் நிறுத்துவது தானே!

தமிழ்ப்பேராயர் திரு மோகனரங்கன் வி.ஸ்ரீ ரங்கம் அவர்கள்

எழுத்துக்களில்

தத்துவங்களின் அந்த சுடரேந்தியான‌

ராமானுஜரை தரிசிக்க 

கொள்ளை ஆவல்.

அடுத்த தடவை அவர் நூலில் தோய்ந்து

களிப்புமிகும் வரிகளோடு

அவரை சந்திப்பேன்.

ஞானத்தின் ஒரு சுடரேந்தியின் 

சொல்லேந்தி அவர்களுக்கு

என் வணக்கங்கள்!


அன்பன் ருத்ரா

________________________________________________________________




 














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக