சனி, 24 டிசம்பர், 2022

"ஹேப்பி நியூ இயர்"

 "ஹேப்பி நியூ இயர்"

_____________________________________

ருத்ரா



வரலாற்றின் பாதைக்கு

அடையாளம் காட்ட‌

மைல் கல்லாக‌

ரத்தம் சொட்ட சொட்ட‌

வாள் ஈட்டிகளையும்

கொய்த தலைகளையும் 

முண்டங்களையும்

நட்டு சென்றார்கள்.

பிணம் தின்னும் கழுகுகளால்

வானமே கந்தல் ஆனது.

கடவுள் என்றால் 

அச்சம் தண்டனை கொடூரம்

என்பவையே அவதாரங்களாய்

ஆர்த்தெழுந்தன.

வில் அம்புக் கூடுகளில் தான்

மதம் கூடுக்கட்டியிருந்தன.

அப்போது

ஒரு பேரொலி.

"பிதாவே இவர்களை மன்னியும்"

கடவுளே இந்த அம்பு பட்டு

வீழ்ந்து போனான்.

கடவுளுக்கும் மனிதனுக்கும்

உள்ள‌

இடைத்திரை கிழிந்தே போனது.

மானுடம் 

மிக்கதோர் அன்பின் ஒளியில்

கன்னிக்குடம் உடைத்து

ஜனனம் காட்டியது.

அப்போது தான்

பயம் கொண்ட மரணம்

என்ற சொல்லே

மரணம் அடைந்தது.

அந்த மாதா கோவில் மணியும்

பெருமாள் கோவில் மணியும்

பள்ளிவாசலின் வான் நோக்கிய‌

இறையொலியும்

ஒரே சுருதிக்குள்

சுருண்டு கொண்டு விட்டது.

அடிப்படையே அற்ற இந்த‌

அடிப்படைவாதிகளின்

குப்பை இரைச்சல்கள்

மறைந்தொழியட்டும்.

புத்தாண்டின் புன்முறுவல்

மொழிபெயர்த்துச்சொன்னது.

பாவம் அந்த எண்கள் களைத்துப்போயின.

ஏதோ ஒரு எண் இருக்கட்டும்.

குவாண்டம் டெலிபோர்டேஷனில்

அந்த ஸ்டேஷனில் போய்

இறங்கிக்கொள்ளும் வரை

அந்த 

ஏதோ ஒரு எண்ணில்

நாளை விடியட்டும்.

"ஹேப்பி நியூ இயர்"

இதற்கு 

மொழி இல்லை

விழி மட்டுமே உண்டு.

___________________________________________





 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக