புதன், 5 மே, 2021

கடந்து போகும்...

 கடந்து போகும்...

____________________________ருத்ரா



இதுவும் கடந்து போகும்.

எதுவும் கடந்து போகும்.

இது என்ன முணு முணுப்பு?

உன் நம்பிக்கைப்பாதையில்

இந்த மைல்கற்களை 

நட்டு வைத்துக்கொண்டா

அந்த ஆகாசத்தை பந்தல் போடுகிறாய்?

"போனால் போகட்டும் போடா"

என்று

கையை உதறி பாடினானே

கவிஞன்...

அந்த அலட்சியத்தில்

வேண்டாத பிரபஞ்சங்கள் கூட‌

தூசியாய் தூரப்போய் விழும்.

கடலாக ஒரு சோகம்

படரும்போதும்

அமிழாத தீவாய் 

முனை முறியாமல் ஒரு

வெளிச்சம் காட்டுகிறது பார்

அந்த வரிகள்

உன் இதயத்துள் அழியாத‌

கல்வெட்டுகள்.


__________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக