வியாழன், 6 மே, 2021

புரிதல்

 எல்லா மொழிகளும்

தங்கள் எழுத்துக்களைகொண்டு

குகை வெட்டிக்கொள்ளும்போது

இருளில் கலந்த கசிவு வெளிச்சமும்

வெளிச்சத்தைக்கொண்டு தோண்டும்போது

அதில் ஒட்டியிருக்கும்

இருளின் பிசிறுகளும் தான்

இறைவன் சைத்தான ஆகிய‌

இருவரிடையே உள்ள‌

டையலக்டிகல் மெடீரியலிசத்தை

சொற்களில் 

"சொற் கலைக்"கொண்டே

பூசிக்கொள்ளுகின்றன.

எதற்கு இப்படி கடினமாக‌

மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டும்?

மனிதருக்குள்ளே

மனிதரிடையே தான்

இறைவம் அன்பை கசிய விட்டுக்கொள்கிறது

என்ற எளிய புரிதல் ஒன்று போதுமே.

மற்றவை எல்லாம் எதற்கு?

__________________________________________

ருத்ரா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக