சனி, 29 மே, 2021

விருதுவுக்கே விருது

 


விருதுவுக்கே விருது 

____________________________________________________________________________


ஓ என் வி விருது இப்போது கவிப்பேரரசு அவர்களால் திருப்பி அளிக்கப்பட்ட 

ஓ என் வி விருதாக மதிப்பில் மிக மிக உயர்ந்து விட்டது.விருதுவுக்கே விருது வழங்கும் வல்லமையுடையது அந்தக்கவிஞனின் கவிதைகள்.


"நான் மிக மிக 

உண்மையாக இருக்கிறேன்.

என் உண்மையை

எவரும் உரசிப்பார்க்கத்

தேவையில்லை"

அவர் சொல்லிய கவிதை இது.

ஒரு உச்சியில் அமர்த்தப்படவேண்டிய‌

கவிதை இது.

ஆயிரம் இமயங்கள் விறைத்து

நின்ற போதும்

அவன் உயரம் முன்னே

இவை எல்லாம் கூழாங்கற்களே.

எங்கள் பெருங்கவிஞனே!

சிறுமதியாளர்களின்

இந்த சில்லறை இரைச்சல்கள்

உன் கவிதை எழுச்சிப்பிரவாகங்களில்

காணாமல் போகும்.


_______________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக