வியாழன், 27 மே, 2021

எனக்குள் ஒரு இலை உதிர் காலம்

 



எனக்குள் ஒரு இலை உதிர் காலம்

_____________________________________


ஒவ்வொன்றாய் 

விழுந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொன்றாய் 

எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொன்றாய்

எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.

உதிர்ந்த ஒவ்வொன்றும்

மலர்ந்து கொண்டிருக்கும்

என் கனவுகள் தான்.

என் நினைவுகள் தான்.

கண்ணீரிலேயே

சலவை செய்யப்பட்டு

கண்ணீரையே கழுவி விட்டு விட்ட‌

புதினங்கள் அவை!

உதிர்ந்து விழுந்தவை 

முற்றுப்புள்ளிகள் அல்ல.

எழுத்துக்கள் தொடரும்.

புதிய புதிய விடியல்களாக!


______________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக